The Coordination Problem

இலங்கையின் பலவீனமான பொது நிதிகள் கொவிட்-19 இலிருந்தான பொருளாதார அதிர்ச்சிகளை மேலும் அதிகப்படுத்தும்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும். ”Sri Lanka’s weak public finances will exacerbate economic shocks from COVID-19

இலங்கையின் தளம்பும் பொது நிதியானது கொவிட்-19 இன் வீழ்ச்சி மூலம் மற்றொரு அடியைப் பெற உள்ளது. ஒரு தொற்றுநோயின் மிக முக்கியமான அம்சம் எப்போதும் மனித செலவாகவிருந்தபோதிலும் வைரஸின் பரவல் பொருளாதாரத்திற்கு முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. சுகாதாரம், போக்குவரத்து, விவசாய மற்றும் சுற்றுலாத் துறைகள் உட்பட பல வழிகள் மூலம் தொற்றுநோய் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. எல்லைகள் மூடப்பட்டு உலக சந்தைகள் மெதுவாக இருப்பதால்; வர்த்தகம் பாதிக்கப்படுகிறது, எனவே ஏற்றுமதிகள் பாதிக்கப்படுகின்றன.

இலங்கையின் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறை மேலும் பாதிக்கப்படும், மேலும் சில முக்கிய ஏற்றுமதியாளர்களின் கட்டளைப் புத்தகங்கள் அடுத்த காலாண்டில் பாதிக்கப்படும். சர்வதேச விநியோகச் சங்கிலிகள் ஒப்பந்த ஏற்றுமதிகள் தடைப்பட்டிருப்பதால், சந்தைகள் கூறுகளாக மீண்டும் திறக்கப்படும் போதும், மூலப்பொருட்கள் குறுகிய விநியோகத்தில் இருக்கக்கூடும். இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவதால் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தாக்கமானது உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் கூட பாதிக்கும். விவசாயமானது இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நடுகைப் பொருட்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள்  ஆகியவற்றில் தங்கியுள்ளது. உள்ளூர் தொழிற்சாலைகள் மூலப்பொருட்கள், கூறுகள் மற்றும் உதிரிப்பாகங்களை வெளிநாடுகளிலிருந்து பெறுவதனால் மேலும் அவை முழு இயல்திறனில் வேலை செய்ய முடியாமல் போகலாம்.

காசுப் பாய்ச்சலானது நின்று போய், கடன்கள் அதிகரிக்கும் போது, ​​பல வணிகங்களால் அதனைச் சமாளிப்பது கடினம். 2008/10 ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடியின் போது, ​​உற்பத்தி நிறுவனங்களிடையே, குறிப்பாக ஆடைத் துறையில் ஆட்குறைப்பு காரணமாக 90,000 இலங்கையர்கள் வேலை இழந்தனர். தற்போதைய நெருக்கடியின் தாக்கம் அதைவிட மோசமாக இருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் நிதி நெருக்கடியைப் போலன்றி, இந்த தொற்றுநோய் தாக்கம் முன்னேறிய நாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. ஏற்றுமதி சந்தைகளின் இழப்பு காரணமாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பாதிக்கப்பட்டன, ஆனால் அவற்றின் உள்நாட்டு சந்தைகள் பாதிக்கப்படவில்லை. இந்த தொற்று அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளை பாதிக்கிறது. அன்றாட ஊதியம் பெறுபவர்கள் தங்களது ஏற்கனவே நிச்சயமற்ற வருமானங்கள் மேலும் குறைந்து போவதைக் காண்பார்கள். சிறு வியாபாராங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

இதன் பொருள் வளர்ச்சி மேலும் குறையும் என்பதாகும். வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையானது வருமான வீழ்ச்சி மற்றும் அதிகரித்த செலவினங்கள் காரணமாக இரட்டிப்பாகும். குறைந்த அளவிலான செயல்பாடு என்பது வரிச் சேகரிப்பின் குறைந்த அளவைக் குறிக்கிறது. விற்பனை மற்றும் இறக்குமதி குறைந்து வருவதால், சேர்பெறுமதி வரி மற்றும் இறக்குமதி வரிச் சேகரிப்புக்கள் குறையும். வணிக இலாபங்கள் குறையும்போது, ​​வருமான வச் சேகரிப்பு குறையும். இதற்கிடையில், தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்திற்கான சுகாதார செலவுகள் (சோதனை கருவிகள் முதல் மருத்துவமனை செலவுகள் வரை) மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான செலவுகள் உயரும். இதனால் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை விரிவடையும் மற்றும் அரசாங்கம் மேலும் கடன் வாங்க வேண்டியிருக்கும். இலங்கையின் வட்டிப் பற்றுச்சீட்டு இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ .1 டிரில்லியன் ஆகும்.

பொது நிதி வலுவானதாக இருந்தாலும், இது ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருக்கும், ஆனால் தொடங்குவதற்கு ஆரோக்கியமற்ற இலங்கையின் நிதி - சமீபத்திய வரி வெட்டுக்களால் பலவீனமடைந்தது. வீழ்ச்சியை மதிப்பிடுவது கடினம், ஆனால் கிடைக்கக்கூடிய கொள்கை விருப்பங்களை மதிப்பிடுவதற்கு முதன்மை சிக்கல்களை மறுபரிசீலனை செய்வது பயனுள்ளதாக இருக்கும்.

இலங்கை 2016 ஜூன் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான வசதியைப் பெற்றது. இது 1950 ஆம் ஆண்டில் இந்த நிதியத்தில் இணைந்ததிலிருந்து இவ்வாறு பெற்ற 16 வது நிகழ்வாகும்- இது அடிப்படை சிக்கல்களின் முறையான மற்றும் நீண்டகால தன்மையைக் குறிக்கிறது. சமீபத்திய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம் "வரி வருவாயில் இரண்டு தசாப்த கால சரிவை மாற்றியமைத்தல் மற்றும் பொது நிதிகளை ஒரு நிலையான நடுத்தர கால கட்டத்தில் வைத்தல்" ஆகும். வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை குறைக்க அரசாங்க வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், எனவே அரசாங்கத்தின் கடன் (பற்றாக்குறைகள் குறையும்போது, ​​கடன் வாங்க வேண்டிய அவசியம் குறைகிறது) குறைகின்றது.

பிரபலமான கற்பனையில், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் சிக்கன நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை: அரசாங்க செலவினங்களைக் குறைத்தல், இது சமூக மற்றும் நலச் செலவுகளை எதிர்மறையாக பாதிக்கிறது. செலவினக் குறைப்பு சமூக நலத்திட்டங்களைக் குறைத்து வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை மூடுகிறது. முந்தைய ‘நல்லாட்சியின்’ கீழ், இலங்கை இதற்கு நேர்மாறாக நடவடிக்கைகளை மேற்கொண்டது: பற்றாக்குறையை ஈடுகட்ட வரிகளை அதிகரித்தது. செலவினம் தீண்டப்படாமல் விடப்பட்டதால் உண்மையில், தொடர்ந்து அதிகரித்தது.

துரதிர்ஷ்டவசமாக, அரசாங்க வருவாயின் பெரும்பகுதி நுகர்வு வரி குறிப்பாக சேர்பெறுமதி வரி வடிவத்தின் மூலம் வருகிறது, எனவே அதிகரித்த வரியின் சுமை பொது மக்கள் மீது எப்படியும் விழுந்தது, இது கடுமையான அதிருப்தியைத் தூண்டியது. வருமான வரியும் அதிகரிக்கப்பட்டது, வணிக சமூகத்தை கோபப்படுத்தியது. இவ்வாறு அரசாங்கம் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்ட தரப்பினரின் கோபத்திற்குள்ளாகி மற்றும் மிகவும் செல்வாக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

பொது நிதி ஓரளவு மேம்பட்டது, ஆனால் ஒருபோதும் வலுவடையவில்லை. 2019 ஏப்ரலில் நடந்த தாக்குதல்களால் விடயங்கள் மீண்டும் நழுவத் தொடங்கின. 2019 நவம்பரில் சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வானது "குறிப்பிடத்தக்க வருமானப் பற்றாக்குறையின் காரணமாக நிதி இலக்குகள் இனி அடைய முடியாது" என்று குறிப்பிட்டது.

2019 நவம்பர் மாத ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, புதிய அரசாங்கம் டிசம்பரில் பெரும் வரி வெட்டுக்களை அறிவித்தது. வரி அதிகரிப்பின் செல்வாக்கற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் விரக்திக்கு பதிலளிப்பது தவறு அல்ல, ஆனால் குறைப்புக்களின் விரிவானது வியக்க வைக்கிறது. பெருநிறுவன வருமான வரி 28% முதல் 24% வரை குறைக்கப்பட்டது, சேர்பெறுமதி வரியானது (VAT) 15% முதல் 8% வரை அரைவாசியாகக் குறைக்கப்பட்டது; நிறுத்தி வைத்தல் வரி, நாட்டைக் கட்டியெழுப்பும் வரி மற்றும் பொருளாதார சேவை கட்டணம் ஆகியன அகற்றப்பட்டன. சீர்குலைந்த பொருளாதாரத்திற்குப் புத்துணர்ச்சியளிப்பதே இதன் நோக்கமாகும், ஆனால் செலவானது - அரசாங்க வருவாயில் கால் பகுதி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-4% பொது நிதிகளை சீர்குலைத்தது.

2020 பெப்ரவரி 7 ஆம் திகதியன்று, சர்வதேச நாணய நிதியம்: “விரிவாக்கப்பட்ட நிதி வசதியினால் (EFF) ஆதரிக்கப்படும் திட்டத்தின் கீழ் முதன்மை மிகை இலக்கானது பலவீனமான வருமான செயல்திறன் மற்றும் அதிகமான செலவினங்கள் காரணமாக  2019 ஆம் ஆண்டில் கணிசமான அளவு வித்தியாசத்தால் தவறவிடப்பட்டதாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3 சதவீத பற்றாக்குறையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.” நிதியின் படி, இலங்கையின் 2020 வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.9% ஆக உயரக்கூடும், இது 2015 இற்குப் பின்னரான மிக உயர்ந்த வீதமாகும். தொற்றுநோயைப் பொறுத்தவரை, இது நம்பிக்கையுடன் கூடியதாகும். 2019 ஆம் ஆண்டிற்கான பற்றாக்குறை 6.5% ஆக இருந்தது, ஆனால் நிதி அமைச்சின் கூற்றுப்படி, “2019 ஆம் ஆண்டிற்கான உண்மையான வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையானது 8 சதவீதத்திற்கு மேல் இருந்திருக்க வேண்டும்”, ஏனெனில் ரூபா .367 பில்லியன் செலவுகள் செலுத்தப்படாமலும், ஆண்டு முடிவில் கணக்கிடப்படாமலும் இருந்தன. 

இதற்கிடையில், தரப்படுத்தல் முகவராண்மைகள் ஃபிட்ச் (Fitch) மற்றும் எஸ் என்ட் பி (S&P) ஆகியன ‘நிலையானதாகவிருந்த’ இலங்கையின் கடன் பற்றிய கண்ணோட்டத்தை “எதிர்மறை” ஆகக் குறைத்தன. இலங்கையின் ஏற்கனவே தள்ளாடும் பொது நிதி இப்போது கொவிட்-19 இன் கூடுதலான பொருளாதார அதிர்ச்சியை சமாளிக்க வேண்டும். 

பொது சுகாதார அவசரநிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய மனித செலவு ஆகியவற்றைக் கையாள்வது கொள்கை வகுப்பாளர்களின் மனதில் இருக்க வேண்டும். ஆயினும்கூட தெளிவான பார்வை கொண்ட பொருளாதாரச் சிந்தனையானது சமமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், மேலும் குறிப்பாக நமது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு மனித செலவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால்தான் ஒரு முடக்கம் அல்லது முழுமையான ஊரடங்கு உத்தரவின் ஒப்பீட்டு செலவுகளை எடைபோடுவது முக்கியம்.

அரசாங்கத்திற்கு மிகப்பெரிய தலைவலி வெளிநாட்டுக் கடனை நிர்வகிப்பதாகும். மத்திய வங்கியின் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நடுத்தர கால கடன் மூலோபாயம் இனி இருக்காது என்ற அனுமானங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது - நடுத்தர காலத்திற்கு 5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி, 5 சதவீத பணவீக்கம் மற்றும் வரவுசெலவுத் திட்டப் பறறாக்குறை 3.5 சதவீதம். நடுத்தர கால மூலோபாயம் சிதைவடையும் நிலையில், முதிர்ச்சியடைந்த கடனை அரசாங்கத்தால் நீடிக்க முடியுமா?

2020 பெப்ரவரியில் மொத்த ஒதுக்கங்கள் 4.6 மாத இறக்குமதிக்கு சமமான 7.9 பில்லியன் அமெரிக்க டொலரர்களாக இருந்தது. 2020 ஆம் ஆண்டில் வெளி கடன் திருப்பிச் செலுத்துதல் 5.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது சீனாவிலிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனால் பகுதியளவில் மீள்நிதியளிக்கப்பட்டுள்ளது, இது மேலும் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது . குறைந்தபட்சம் மூன்று மாத இறக்குமதியைப் பராமரிக்கும் அதே வேளையில், இந்த ஆண்டின் கடனைத் திருப்பிச் செலுத்த விரும்பினால் குறைந்தபட்சம் 2-2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட நாடு எதிர்பார்க்கிறது.

அதன் பொது நிதி ஒழுங்கீனங்கள் காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம் புரண்டதுடன் தவிர்க்க முடியாத கடன் தரமிறக்குதல் காரணமாக, கடன் வாங்க சந்தைக்கு திரும்புவது சாத்தியமில்லையென தரப்படுத்தல் முகவராண்மைகளினால் எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாண்டு முதிர்ச்சியடையும் இலங்கையின் இறையாண்மை பத்திரங்களின் வருவாய் அதிகரித்துள்ளது. இதை எழுதும் நேரத்தில், முதலீட்டாளர்கள் தற்போதைய வருமானத்தில் 101 சதவிகித அதிகரிப்பினைக் கேட்கிறார்கள், அடுத்த ஆண்டு முதிர்ச்சியடையும் பத்திரங்கள் 44% ஆகும். ஒரு புதிய சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் சந்தைகளுக்கு நம்பிக்கையை மீட்டெடுக்கும், ஆனால் இது வலிமிகுந்த இறுக்கத்திற்கு திரும்புவதைக் குறிக்கும். மேலும் பிணை எடுப்புகளுக்கு மேல்முறையீடு செய்வது மிகவும் கவர்ச்சிகரமான தெரிவாகும்.

கடன் நிவாரணம் கோரிய நாடுகளில் இலங்கையும் உள்ளது. இந்த அழைப்புக்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியன ஆதரவு அளித்துள்ளன. இந்த அழைப்பு ஏழ்மையான நாடுகளுக்கானது என்றாலும், இந்த அமைப்புகள் சமீபத்தில் இலங்கை போன்ற உயர் நடுத்தர வருமான வகையாக மாற்றப்பட்ட நாடுகளை பரிசீலிக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. சில விமர்சகர்கள் அரசாங்கம் எளிதாக மீளச்செலுத்தாதிருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். இது எளிதாகத் தோன்றினாலும், வணிகக் கடனை மறுசீரமைப்பது கூட ஆபத்தானதாகும்: திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைப்பது அல்லது குறைப்பது சந்தைகளால் திருப்பிச்செலுத்தத் தவறும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது, அதாவது சிறிது காலத்திற்கு சந்தைகளுக்குத் திரும்புவது கடினமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி, முதலீடு மற்றும் தனியார் துறை கடன் பொதுவானதாக இருப்பதால் இது பொருளாதாரத்திற்கு ஒரு அதிர்ச்சியை அளிக்கிறது. இது வங்கி தோல்விக்கு வழிவகுத்து நிதித் துறை பாதிக்கப்படலாம்.

1998-2000 ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரைன், ஈக்வடோர் மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் மறுசீரமைப்புகளை உள்ளடக்கிய மறுசீரமைப்பின் விளைவுகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வு 2002 இனால்  காட்டப்பட்டது:

"உண்மையான வருமானம் மற்றும் நிதியுதவியின் வீழ்ச்சி உள்நாட்டுக் கேள்விக்குப் பரவியது. நம்பிக்கை சரிந்ததுடன் தனியார் முதலீடு கடுமையாக குறைக்கப்பட்டது. தனியார் நுகர்வில் ஒரு பின்னடைவுடன் இருந்தாலும், சிறிது காலத்திற்கு குடும்பங்கள் தங்களுடைய சேமிப்பிலிருந்து பணத்தை மீளப்பெற்றன. பொது நிதிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில் பொது நுகர்வு குறைக்கப்பட்டது. பரிமாற்றக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், மூலதன உள்ளீடுகள் குறைந்ததன் விளைவாக வெளிநாட்டு நிதிகளின் பற்றாக்குறையை பிரதிபலிக்கும் மாற்று விகிதங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. உள்நாட்டுக் கேள்வி குறைந்தமை மற்றும் இறக்குமதிப் பிரதியீடு ஆகியன நடைமுறைக் கணக்குகளை மேம்படுத்த உதவின. நாணய மாற்றுத் தேய்மானம் விலைகளுக்கு விரைவாகச் சென்று பணவீக்கம் அதிகரித்தது. ஊதியங்கள் குறைவடைந்துள்ளதுடன், பணவீக்கம் வைப்புகளின் பெறுமதியை அழித்துவிட்டது, வேலையின்மை அதிகரித்ததுடன் குடும்பங்கள் கணிசமான உண்மையான வருமான இழப்புகளை சந்தித்தன. ”

இலங்கை இவ்வாறு திறமையாகக் கையாளுவதற்கு வாய்ப்புக்கள் குறைந்த  ஒரு தந்திரமான நிலையில் தன்னைக் காண்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு கொவிட்-19 மட்டும் காரணமிட்டாவிட்டாலும் இது விடயங்களை மிகவும் மோசமாக்கியுள்ளது. தொற்றுநோய் பல தசாப்தங்களாக வளர்ந்து வரும் கொள்கை பலவீனங்களை ஒரே நேரத்தில் வளர்ச்சி, நிதி மற்றும் வெளித் துறைகளை உள்ளடக்கிய ஒரே மாபெரும் அதிர்ச்சியாக மாற்றிவிட்டது.

சர்வதேச மூலதன சந்தைகளுக்கான அணுகல் ஒப்பீட்டளவில் குறுகிய வரலாற்றைப் பின்பற்றி, உள்நாட்டு கொள்கை குறைபாடுகள் மற்றும் வெளிநாட்டு அதிர்ச்சிகளாகிய: ஆசிய நெருக்கடிக்குப் பின்னரான சாதகமற்ற வெளிப்புற சூழலுக்கு மேலதிகமான ரஷ்யா மற்றும் ஈக்வடோர் நாடுகளுக்கான பலவீனமான எண்ணெய் விலைகள், அணுசக்தி சோதனையைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கான  சர்வதேச தடைகள், ஈக்வடோரிற்கான எல்-நினோ விளைவு, உக்ரேனுக்கான ரஷ்யாவின் கொந்தளிப்பு ஆகியவற்றினால் பேரினப் பொருளாதார நிலைமை ஸ்திரமின்மைக்கு உட்பட்டமையும்  மேலே குறிப்பிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வின் ஒரு  விடயமாக இருந்தது

குறுகிய காலத்தில்  பிணை எடுப்புக்கள் அவசியமாக இருக்கும், ஆனால் இது பிரச்சினைகளை பின்னர் மிக தொலைவிலுள்ள திகதியன்றுக்கு ஒத்திவைக்கும் ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமேயாகும். கொவிட்-19 நெருக்கடியின் உலகளாவிய தன்மையைக் கருத்தில் கொண்டு, சீனாவிலிருந்து மேலும் இரு-பக்கக் கடன்கள் சாத்தியமாக இருக்கும்போது, ​​மேலும் இரு-பக்க உதவி ஒரு யதார்த்தமான விருப்பமாக இருக்காது. இது 1 டிரில்லியன் டொலர் கடன்பெறும்  இயல்திறனுடன், ஒரு சர்வதேச நாணய நிதியத் திட்டமானது மேலும் கடன் பெறுவதற்கான ஒரே யதார்த்தமான தெரிவினை வழங்குகிறது.

மறுதலிக்கும் நிலையில் வாழ்ந்து வரும் அரசியல்வாதிகள் மற்றும் குடிமக்கள் கடுமையான யதார்த்தங்களை எழுப்ப வேண்டும். தேர்தலுக்கு முந்தைய துணிச்சலும் நீண்டகாலமாக நிலவிய சதித்திட்டக் கோட்பாடுகளும் உலகளாவிய நிதி நிறுவனங்களுடனான நடுநிலையான சிந்தனை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்காக களைந்தெறியப்பட வேண்டும். ஒரு பங்கினை வகிப்பதற்கு வலுவூட்டப்பட்ட அனைத்து சட்டரீதியான நிறுவனங்களுடனும் கலந்தாலோசித்து பொருளாதார முகாமைத்துவம் மேற்கொள்ளப்பட் வேண்டும்.

தவறுகள் செலவு மிக்கவையானதுடன் கொவிட்-19 தொற்றுநோய் பரவலை கடுமையான பொது சுகாதார நெருக்கடியிலிருந்து பேரழிவுகரமான பொருளாதார நெருக்கடியாக மாற்றும் அபாயத்திற்கு இட்டுச் செல்லக்கூடும்.

சமூக இடைவெளி ஆனால் பொருளாதார ஒருங்கிணைவு

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
Social distancing but economic convergence

- தனநாத் பெர்னான்டோ

புதிய கொரோனா வைரஸ் (கொவிட் -19) உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை, சமீபத்திய வரலாற்றில் இது மூன்றாவது முறையாக பயங்கரவாதி அல்லாத எதிரிக்கு எதிராக நாம் போராட வேண்டியிருந்தது. முதலாவதாக, 2004 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடல் சுனாமி எங்கள் கரையில் மோதியது, பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டெங்கு தீவிரமாகப் பரவியதுடன் இப்போது இந்த வைரஸ் பரவுகையாகும். அதேசமயம், எங்களுக்கு 30 வருடகால பயங்கரவாதப் போர் இருந்தது, அதைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு முன்பு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்தன. சுருக்கமாக, முன்னெப்போதையும் விட அதிகமான தேசிய அவசரநிலைகள் இருப்பதாகத் தெரிகிறது.

இத்தகைய நெருக்கடிகளின் போது, ​​ஒரு நாடாக தனிமைப்படுத்தப்படுவதும், தன்னிறைவும் இத்தகைய வெளிப்புற அதிர்ச்சிகளைத் தவிர்ப்பதற்கான சிறந்த தீர்வுகள் என்று உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற வெளிப்புற காரணிகளால் நமது உயிர்வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது இந்த முடிவுக்கு செல்வது இயற்கையானது.

இருப்பினும், இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு சிறந்த கதை பௌத்த ஜாதகக் கதைகளிலுள்ள  “சம்மோதன ஜாதக” - வேட்டைக்காரன் மற்றும் பறவைகள் கூட்டத்தின் கதையாகும். வேட்டைக்காரன் பறவைகள் கூட்டத்திற்கு வேட்டைக்காரன்  அச்சுறுத்தலாக இருந்ததுடன் பறவைகள் தனிப்பட்ட திசைகளில் பறந்தமையால் வேட்டையாடுபவரின் வலையில் சிக்கிக்கொண்டன. இது சில தடவைகள் நடந்த பிறகு, பறவைகள் மூலோபாயமொன்றை வகுத்தன; அனைவரும் ஒன்றாக வலையை நோக்கி ஒரே திசையில் பறந்து, ஒரு மரத்தை நோக்கி தங்கள் சொண்டுகளால் இழுத்து வந்து, தப்பின. பொருளாதார தனிமை, சுய-நிலைத்தன்மை மற்றும் உலகமயமாக்கலிலிருந்து விலகிக்கொள்ளல் ஆகியவை தீர்வுகள் என்று தோன்றினாலும், உண்மை என்னவென்றால், முன்பை விட ஒன்றோடொன்று ஒன்றோடொன்று இணைந்திருக்கும் உலகில், அது நேர்மாறானதாகும்.

பொருளாதாரப் பாதிப்பு

இது உலகளாவிய சவால் என்பதால் கொவிட் -19 இன் தாக்கம் தனித்துவமானது. கொவிட் -19 இன் பொருளாதார தாக்கம் உள்நாட்டிலும் உலக அளவிலும் கடுமையாக இருக்கும். நகரங்களை மூடுதல் மற்றும் முடக்குதல் காரணமாக கேள்விப் பக்கத்தில், நுகர்வு கடுமையாக வீழ்ச்சியடையும். உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16% பங்களிக்கும் உலகத் தொழிற்சாலையாகிய சீனா, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், விநியோகச் சங்கிலிகள் மற்றும் உற்பத்தி வலையமைப்பு இணைப்புக்கள் தற்போது செயற்படாததால் வழங்கல் பக்கத்தில், கடுமையான வீழ்ச்சி ஏற்படும்.

இலங்கையர்களைப் பொறுத்தவரை, சர்வதேச சந்தைகளில் (ஐரோப்பா மற்றும் அமெரிக்கா) குறைந்த நுகர்வு, தொற்று பயம் காரணமாக நடவடிக்கைகளைத் தொடர முடியாமல் போதல் மற்றும் உலகளாவிய  உற்பத்தி வலையமைப்பினுள் குழம்பியுள்ளதால் விநியோகச் சங்கிலிகளைப் பராமரிப்பதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளுதல்  போன்ற காரணங்களால் நமது தைத்த ஆடை வர்த்தகம் அபாயத்தை எதிர்நோக்கும். எங்கள் பெரும்பாலான உணவு ஏற்றுமதிகள் மற்றும் எமது  ஏற்றுமதிப் பொருள் தொகுதியிலுள்ள பல பொருட்களைப் பொறுத்தவரையில் இது உண்மையாகும்.

மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவில் வைரஸின் தாக்கம் காரணமாக கருத்தில் கொண்டு எங்களுக்கு வரும் பணம் தொடர்ந்தும் குறைவடையும். இந்தத் தொடர்ச்சியான எதிர்வினையானது மக்கள் தங்கள் வாகன குத்தகை தவணைகளை செலுத்த முடியாத நிலை அல்லது வங்கி கடன் தவணை செலுத்துதல்களைத் தவறுதல் வரை தொடர்கிறது. பொருளாதார ரீதியாக ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு, மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் என்பன எட்ட முடியாததாகிவிடும்.

வேலையின்மை அதிகமாக இருக்கும் மற்றும் செயல்படாத கடன்கள் அதிகரிக்கும். சுற்றுலா மேலும் பாதிக்கப்படுவதுடன் சுற்றுலாவுடன் தொடர்புடைய அனைத்து விநியோகச் சங்கிலிகளும் அதே கீழ்நோக்கிய போக்கில் தொடரும். அரசாங்கத்தின் தலையீட்டின் அடிப்படையில் பணவீக்கம் உயரும். இந்த நெருக்கடி மிகுந்த சூழ்நிலையில் நமது நிதி நிலையை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் அளவில் பெரிய பொதுத் துறையை பாதுகாத்தல் குறித்து இலங்கை அரசு தீவிரமான கேள்விகளை எதிர்கொள்ளும். இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன் உலகளாவிய நிதி நெருக்கடியிலிருந்து பொருளாதாரங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

விலைக் கட்டுப்பாடு தீர்வாகாது

கடந்த செவ்வாய்க்கிழமை (17) இரவு, பொருளாதாரம் குறித்த சில நிவாரண நடவடிக்கைகள் மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஜனாதிபதி அறிவித்தார். வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் நுழையும் பயணிகளைத் தனிமைப்படுத்தும் செயல்முறைக்கு அரசாங்கம் வழங்கும்  வசதியளித்தலானது பாராட்டத்தக்கதாகும். இருப்பினும், முகக் கவசங்கள், பருப்பு மற்றும் தகரத்திலடைத்த மீன் ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் விலைக் கட்டுப்பாடுகள் ஏழைகளுக்கு உதவாது. இது வெறுமனே இருப்பில் இருக்கும் பொருட்களை  இறாக்கைகளிலிருந்து வேகமாக அப்புறப்படுத்தும்.

எந்தவொரு விற்பனையாளரும் எந்தவொரு பொருளையும் அதன் உண்மையான விலையை விடக் குறைந்த விலையில் விற்க விரும்புவதில்லை. மார்ச் முதல் வாரத்தில் மைசூர் பருப்பின் விலை வரம்பானது ரூபா. 124-200 ஆகவிருந்ததுடன்  ஒரு 425 கிராம் தகரத்திலடைத்த மீனின் விலை சுமார் ரூ. 220-300 ஆகவிருந்தது. எனவே, பருப்பு மற்றும் தகரத்திலடைத்த மீனைக் கட்டுப்பாட்டு விலையில் முறையே ரூபா. 65 மற்றும் ரூபா. 100 இற்கு விற்பதற்கு கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகும். இதன் விளைவுகள் என்னவென்றால், விற்பனையாளர்கள் சட்டரீதியான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக இவற்றை விற்பதை நிறுத்திவிடுவார்கள், இது ஏழைகளையும் பணக்காரர்களையும் தாக்கும், ஏனெனில் இறாக்கைகளில் அவர்கள் வாங்குவதற்கு எதுவும் இருக்காது, சந்தையை முழுவதுமாக சிதைத்து, அல்லது அரசாங்கத்தின் நோக்கத்தை தோற்கடித்து விற்பனையாளர்கள் தொடர்ந்தும் அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள். 

முகமூடிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் இதேபோன்ற நிலை ஏற்பட்டதுடன் அவை ஏற்கனவே மருந்தகங்களில் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக அரசாங்கம், தகரத்திலடைத்த மீன் மற்றும் மைசூர் பருப்பு ஆகிய இரண்டிற்குமான இறக்குமதித் தீர்வையை குறைத்திருக்க முடியும், ஏனெனில் அதனைத்  இப்போது தாமதித்து முகமூடிகளுக்குச் செய்திருக்கிறார்கள். இது நுகர்வோருக்கு விலைச் சலுகைகளை வழங்க  வழிவகுப்பதுடன் விநியோகத்தையும் உறுதி செய்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து தகரத்திலடைத்த மீன் வகைகளுக்கும் அண்ணளவாக 35% தீர்வைக் கட்டணத்தை நாங்கள் செலுத்துகிறோம் என்பதை உங்களால் நம்ப முடியுமா?

வியாழக்கிழமையன்று  இலங்கை மத்திய வங்கி எமது நாணயமாற்று வீதத்தைப் பாதுகாக்க மோட்டார் வாகனங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட சலுகைகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. இது மீண்டும் ஏழைகளையும் வருமானம் குறைந்தவர்களையுமே அதிகம் பாதிக்கும். இப்போது வாகனங்கள் அதிக வருமானம் ஈட்டுபவர்களால் மட்டுமல்ல, நுண் மற்றும் சிறு தொழில் முனைவோரினாலும் தங்கள் தொழில்களை நடத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களும் அவர்களது ஊழியர்களும் இதனால் மோசமாக பாதிக்கப்படுவார்கள். சுவ்ரக  (SUV) வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் சமாளித்துக்கொள்வார்கள்.

உலகளாவிய ஒத்துழைப்புக்கான தருணம்

நிலையான மற்றும் குழப்பமான செய்தி ஊட்டங்கள் ஒன்றிணைந்து நாடுகளாக, நாம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று உணரவைத்தன. இருப்பினும், உலகளாவிய சமூகமாக நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் இது. இந்த பொருளாதார தாக்கத்தை சமாளிப்பதற்கு இந்த தொற்றுநோயிலிருந்து மீளவும், எதிர்கால சவால்களைத் தவிர்ப்பதற்கு மேலும் ஒத்துழைக்கவும் முழு உலகமும் நமக்குத் தேவைப்படுகின்றது. எமது செயல்பாடுகளைத் தொடங்குவதற்காக உலகின் பிற பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட எமது வழங்குனர்கள் மீள்வதும் அவர்களின் பணிக்குத் திரும்புவதும் எமக்கு அவசியமாகின்றது. எமது தயாரிப்புகள் சிறப்பாக இருக்க, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் வேகமாக நகருவதற்கு எங்களுக்கு கொள்வனவுத் திறன் தேவை. கொவிட் -19 க்கான தடுப்பூசி நம்முடையதை விட அதிக இயல்திறன் கொண்ட விஞ்ஞானிகளால் முடிவு செய்யப்பட்டவுடன், அதை நம் மக்களுக்கு வியாபாரம் செய்யவும் கொள்வனவு செய்யவும் முடியும். தனியாக நாம் எல்லா சவால்களையும் எதிர்கொள்ள முடியாது என்பதற்கு இந்தத் தொற்றுநோய் நல்லதொரு நினைவூட்டலாகும். சுதந்திரத்தின் முக்கியத்துவமும், நமது சுதந்திரத்தை பொறுப்புடன் உரிமையாக்குவதும் இப்போது நமக்கு நினைவுபடுத்தப்பட்டுள்ளன.

கொவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்குச் சீனா , இத்தாலி மற்றும் அமெரிக்காவிற்கு மருத்துவ உபகரணங்களை வழங்கியது. ரோமானிய கவிஞர் அன்னியோ செனெகாவின் ஒரு மேற்கோளாகிய “நாங்கள் ஒரே கடலில் இருந்துவரும் அலைகள்" என்பது அந்த பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

இதேபோன்ற முறையில், ஜப்பான் சீனாவுக்கு சில மருத்துவ பொருட்களை நன்கொடையாக அளித்தது, பின்வரும் சீனக் கவிதை அதன் உறையில் எழுதப்பட்டதாகக் கூறப்பட்டது: “எங்களுக்கு வெவ்வேறு மலைகள் மற்றும் ஆறுகள் இருப்பினும், நாங்கள் ஒரே சூரியன், சந்திரன் மற்றும் வானத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.”

இந்த கொவிட் -19 தொற்றுநோய் பரவலானது நாம் அனைவரும் ஒரே கடலில் இருந்து வரும் அலைகள் என்பதையும்  நாம் அனைவரும் ஒரே சூரியன், சந்திரன் மற்றும் வானத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதையும் நினைவூட்டுமாக.

தன்னிறைவுக்காக உணவுப் பாதுகாப்பை தியாகம் செய்தல்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
Sacrificing food security for self-sufficiency

- தனநாத் பெர்னான்டோ

70 களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட பெரும் தோல்விக்குப் பின்னர் “தன்னிறைவு” என்ற மூடநம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் ஒரு சமூகத்தின் வீழ்ச்சியில் கிட்டத்தட்ட முழு மக்கள்தொகையையும் விட்டுச்சென்றதுடன் ஆளும் உயரர்மட்டத்தினரின் வயிற்றை நிரப்பியது. "தன்னிறைவு" என்ற சொல்லின் வரைவிலக்கணத்திற்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. இலங்கை பூஜ்ஜிய வர்த்தகத்துடன் மற்றும் சர்வதேச வரைபடத்தில் ஒருபோதும் காணப்படாத ஒரு சகாப்தத்திற்கு ஒரு கருத்தியல் இட்டுச் செல்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், ஒருவர் பயிரிட்டவைகளை மாத்திரம் உட்கொண்டு வாழ்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. பின்னர் மாற்று வாதங்கள் எழுந்தன- உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒருவருக்கு தன்னிறைவு தேவை; உணவில் தன்னிறைவு பெற வேண்டும், ஆனால் எரிபொருள், நிலக்கரி, மருந்து, மூலப்பொருட்கள் மற்றும் பிற "அத்தியாவசியப் பொருட்களை" இறக்குமதி செய்யலாம் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர் . எங்கள் வர்த்தக பற்றாக்குறை எங்கள் வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டதுடன் நமது ஏற்றுமதி திறனை அதிகரிப்பதற்கு நாம் தன்னிறைவு பெற வேண்டும் என்று நம்புகிற மற்றவர்களும் இருக்கிறார்கள்,. எல்லா வாதங்களிலும், உணவுப் பாதுகாப்பு என்பது மிகவும் பிரபலமானது. எனவே, உணவுப் பாதுகாப்பு குறித்த தரவுகள் மற்றும் வரையறைகளை ஆராய்ந்து இலங்கை உண்மையிலேயே “தன்னிறைவு” பெற முடியுமா என்பதை மதிப்பீடு செய்வோம்.

உணவுப் பாதுகாப்பு என்றால் என்ன?

"உணவுப் பாதுகாப்பு" என்ற பிரபலமான நம்பிக்கையானது, ஒரு நெருக்கடியின் போது நமது நுகர்வுக்கு போதுமான உணவைக் கொண்டிருக்க வேண்டுமென்பதாகும். தற்போதைய உலகளாவிய COVID-19 நெருக்கடியானது ஒரு முக்கிய உதாரணமாகும். ஆறு மாதங்கள் நீடிக்க போதுமான உணவு இருப்பினை வைத்திருத்தல் மற்றும் நாட்டின் பிராந்திய எல்லைகளுக்குள் தேவையான கலோரி அளவை உற்பத்தி செய்யும் திறனே உணவுப் பாதுகாப்பு குறித்த மற்றொரு பொதுவான கட்டுக்கதையாகும். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் உலக உணவு உச்சி மாநாடு ஆகியன உணவுப் பாதுகாப்பை பின்வருமாறு வரையறுத்துள்ளன: “அனைத்து மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தானதும் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அவர்களின் உணவுத் தேவைகளையும் உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்கின்றதுமான உணவுக்கான பௌதீக மற்றும் பொருளாதார அணுகலைக் கொண்டிருக்கும்போது உணவுப் பாதுகாப்பு உள்ளது ”

பிரபலமான நம்பிக்கை இருந்தபோதிலும், உணவுப் பாதுகாப்பை அடைவதற்கு, அக்கறை கொண்ட நாடு அதன் எல்லைக்குள் தேவையான உணவை உற்பத்தி செய்யத் தேவையில்லை. முக்கியமானது தேவையான உணவை அளவிலும், விரும்பிய தரத்திலும் சிக்கனமாக  உற்பத்தி செய்வதாகும். இல்லையெனில், எங்கள் விலைமதிப்பற்ற மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களை வீணாக்குவோம். இதற்கு இலங்கையின் 65,610 சதுர கிலோமீற்றர்களுடன் ஒப்பிடும்போது வெறும் 725.7 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட சிங்கப்பூரை  உதாரணமாக எடுத்துக் கொள்ளவும். வணிக வேளாண்மை இல்லாத போதிலும், இரண்டாவது வருடமாகவும் உலகளாவிய உணவு பாதுகாப்பு குறிகாட்டியில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. ஏனென்றால், சிங்கப்பூர் உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலியுடன் முழுமையாக ஒருங்கிணைந்து, வெளிப்புற அதிர்ச்சிகளின் போது தனது குடிமக்களுக்கு உணவளிக்க போதுமான இருப்பினை உருவாக்கியுள்ளது. இது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாகும், ஏனெனில் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் (FAO) வரையறுக்கப்பட்ட, பாதுகாப்பான, போதுமான மற்றும் நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் உணவை உட்கொள்ள முடியும். ஒப்பீட்டளவில் அதே குறிகாட்டியில் இலங்கை 66 வது இடத்தில் உள்ளது. சக இலங்கையர்களுக்கு எல்லா நேரங்களிலும் பௌதீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உணவு கிடைப்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) வரைவிலக்கணத்தின்படி, கொவிட்- 19  நெருக்கடியின் போது தெளிவாகத் தெரிவது என்னவென்றால், நம்மிடம் பௌதீக ரீதியாக உணவு இருந்தாலும், ஒரு நாடு என்ற வகையில் நமது உணவுப் பாதுகாப்பு, விநியோகப் பிரச்சினைகள் காரணமாக இந்த உணவுக்கு ரீதியான அணுகல் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது, அவர்களின் அன்றாட ஊதியங்கள் தடைப்படுவதாலும் உணவு விருப்பத்தெரிவுகள் இல்லாததாலும் மக்கள் உணவுக்கான பொருளாதார மற்றும் பௌதீக ரீதியான அணுகல்கள் இரண்டையும் இழக்கின்றனர். பண்டாரநாயக்க அரசாங்கம்  பின்பற்றிய தோல்வியுற்ற சோசலிச சோதனை மேற்கூறியவற்றில் எதையும் அடையத் தவறிவிட்டது. குறைந்தபட்சம் உணவு போதுமானதாக இல்லை; தெரிவு ஒரு கனவாக இருந்ததுடன் தரம் ஒருபோதும் இருக்கவில்லை. ஒரு குடிமகன் அதை விட மேலதிகமாக எதையாவது வைத்திருந்து  கைது செய்யப்பட்டால், அது ஒரு கொடூரமான குற்றமாகக் கருதப்பட்டு அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். மாவு பூச்சிகளாலும் மற்றும் அரிசி கற்களாலும் பழுதடைந்தது, மற்றும் மண்ணெண்ணெய் வாசனை மற்றும் விறகு அடுப்புக்கு அருகில் கவனக்குறைவாக இருப்பவர்களால் தீப்பற்றும் அபாயத்துடன் துணிமணிகள் இருந்தன. குறைந்த தரத்திலான பாணிற்காக உலகில் மிக நீண்ட வரிசைகளில் நாம் காத்திருந்தோம்.  அதுவும் உங்கள் குடும்பத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே ஒரு இறாத்தல் பாணிற்காக மட்டுமே நாம் காத்திருந்தோம். சுருக்கமாக, நகர்ப்புற சமூகத்திற்கு (பெரும்பான்மையானவர்கள் உணவு வாங்க பணம் வைத்திருந்த இடத்தில்), பௌதீகரீதியான அணுகல் மற்றும் விருப்பத்தேர்வுகள் இல்லாததால் உணவுப் பாதுகாப்பு சவாலுக்குட்பட்டது, அதே நேரத்தில் கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட சமூகங்களின் உணவுப் பாதுகாப்பு வருமானம் மற்றும் விருப்பத்தேர்வுகள் இல்லாததால் சவாலுக்குட்பட்டதுடன் அவர்கள் தங்கள் தோட்டங்களில் கிடைக்கக்கூடிய அல்லது காடுகளில் வளர்ந்த அனைத்தையும் உட்கொண்டனர். ஆகவே, உணவுப் பாதுகாப்பு என்பது தன்னிறைவு பெற முயற்சிப்பதன் மூலம் நாம் அடையக்கூடிய ஒன்றல்ல என்பது வெளிப்படையானது, ஏனெனில் அணுகல், மலிவு, பாதுகாப்பு, விருப்பத்தேர்வுகள் மற்றும் போசணைப் பெறுமதி போன்ற பல கூறுகள் உள்ளன. உணவு மற்றும் விவசாய அமைப்பின் படி (FAO) ஒரு நபரின் சராசரி தினசரி சக்தித் தேவையானது 1,680 கிலோகலோரியாகவிருப்பதுடன் இலங்கையில்  இந்த வரையறையை விட சராசரியாக 500 கிலோகலோரி அதிகமாக உள்ளது, ஆனால் சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர தரவுகளின்படி, இலங்கை முழுவதும் ஏழ்மைத் துறையில் இந்த சக்தி உள்ளெடுத்தலானது உலக தரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. ஆகவே, நீண்ட காலத்தில் உணவுப் பாதுகாப்பு குறித்து நாம் தீவிரமாக இருந்தால், தன்னிறைவுக்கான வீழ்ச்சியில் வாழ்வதை விட, பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை நம் மக்கள் வாங்க முடியும் என்பதையும், அணுகலைப் பராமரித்து, தெரிவையும் உறுதிப்படுத்த வேண்டும். இதை அடைவதற்கு, உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலிகளுக்கு பாதுகாப்பான அணுகலை நாம் உருவாக்க வேண்டும், இதன் மூலம் நமது மக்கள் அவர்களது சக்தித் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான பல்வேறு வகையான உணவுகளை (சமநிலையான உணவு)வாங்க முடியும். ஒருவரிடம் காணப்படக் கூடிய அடுத்த கேள்வி என்னவென்றால், இது நம்முடைய எல்லா உணவுகளையும் இறக்குமதி செய்யப் போகிறோமா என்பதும், நமக்குத் தேவையான அனைத்தையும் இறக்குமதி செய்ய போதுமான அந்நிய செலாவணி உள்ளதா என்பதும் ஆகும். 

குறைந்த விவசாய உற்பத்தித்திறன்

மேற்கூறிய இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்கு, நமது விவசாயத்தில் (துறை) உற்பத்தித்திறன் ஏன் குறைவாக உள்ளது என்பதை நாம் சரிபார்க்க வேண்டும். எங்கள் நெல் வயல்களை தொழில்நுட்பம் எட்டாமையானது பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட பொதுவான சாக்காகும். ஆனால் தொழில்நுட்பம் நெல் வயல்களை எட்டாததற்கான காரணத்தைப் பற்றி நாம் சிந்தித்துள்ளோமா? இலங்கையில் 6.5 மில்லியன் ஹெக்டெயர் நிலத்தில், 5.4 மில்லியன் ஹெக்டெயர் நிலம் அரசுக்குச் சொந்தமானதாகும். சதவீத அடிப்படையில், தனியார் நிலங்கள் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் வெறும் 18% மட்டுமேயாகும். விவசாயிகள் அதிக அறுவடை தரக்கூடிய நெல் பயிரிட வேண்டுமானால் அசாங்க அலுவலகத்திலிருந்து அனுமதி பெற வேண்டும். விவசாயிகளுக்கு அவர்கள் பயிரிடும் நிலத்திற்கு உரித்து வழங்கப்படாததால், பெரும்பாலான நெல் நிலங்களுக்கு வங்கி கடனுக்கான அணுகல் மிகவும் குறைவாகவே உள்ளது. சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதால் நெல் வயலில் எந்தவொரு கட்டுமானமும் செய்ய முடியாது. தற்போதைய ஒழுங்குபடுத்தல் விதிமுறையின்கீழ், எந்த முதலீட்டாளரும் பச்சைவீட்டுப் பண்ணை அல்லது உயர் தொழில்நுட்ப பண்ணையில் முதலீடு செய்ய மாட்டார்கள். மேற்கூறியவற்றிற்கு மேலதிகமாக, பெரும்பாலான நெல் நிலங்கள் துண்டாடப்பட்டுள்ளன, எனவே உற்பத்தி செலவுகள் அதிகமாக இருக்கும் ஒரு பெரியளவிலான விவசாய செயல்பாட்டினை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், நாங்கள் மீண்டும் தன்னிறைவுக்குச் சென்று எங்கள் கொல்லைப்புறங்களில் பயிரிட்டாலும், நம்முடைய முழு நிலத்தின் ஐந்தில் ஒரு பகுதியை மட்டுமே பயிரிடவும், வீடுகளை கட்டவும், மற்ற அனைத்து தொழில்துறை வேலைகளையும் செய்ய வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், எமது ஊழியர் படையில் சுமார் 25% விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோம், ஆனால் நமது பெரும்பாலான நிலங்களை பயனற்றதாக விட்டுவிட்டு, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7-8% மட்டுமே பங்களிப்பு செய்கிறோம். 

உணவு இறக்குமதி மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை

நாம் எவ்வளவு வளமானவர்களாக இருந்தாலும் தீவிர தன்னிறைவு என்பது ஒரு விருப்பமல்ல, ஏனெனில் நமக்கு தேவையான அனைத்தையும் நம்மால் உற்பத்தி செய்ய முடியாது என்பது தெளிவானதாகும்- உதாரணம் - எரிபொருள் மற்றும் இயந்திரங்கள். எங்கள் வர்த்தக பற்றாக்குறையை குறுகியதாக வைத்து அதை மிகையாக மாற்றுவதற்கான ஒரே வழி நமது ஏற்றுமதியை மேம்படுத்துவதாகும். ஏற்றுமதியும் இறக்குமதியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். எங்களால் உற்பத்தி செய்ய முடியாத தயாரிப்புகள் அல்லது போட்டி நன்மை இல்லாத தயாரிப்புகளை நாங்கள் இறக்குமதி செய்கிறோம். எங்களுக்கு போட்டி நன்மை உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்கிறோம்.  ஏன் உலகளாவிய ஒத்துழைப்பால் மட்டுமே உணவுப் பாதுகாப்பை அடைய முடியும் என்பதை சுருக்கமாகக் கூறும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO)  ஒரு பிரித்தெடுப்பு பின்வருமாறு: “உலகளாவிய உணவு வர்த்தகம் தொடர்ந்து செல்ல வேண்டும். மக்கள் சாப்பிடும் ஒவ்வொரு ஐந்து கலோரிகளில் ஒன்று குறைந்தது ஒரு சர்வதேச எல்லையையாவது  தாண்டியுள்ளது, இது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 50% க்கும் அதிகமாகும். ” எனவே, நமது ஏற்றுமதியை வளர்ப்பதற்கான நமது இயலாமை மற்றும் பாரம்பரியமாக மந்தமான அணுகுமுறை நமது மக்களின் உண்மையான மற்றும் அர்த்தமுள்ள உணவு பாதுகாப்பிற்கான வர்த்தக சமரசமாக இருக்கக்கூடாது.





எமது எல்லைகளில் சிக்கல்கள்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
Trouble at our borders

- எரந்தி டீ சில்வா

இலங்கையின் நீண்டகாலம் நிலவும் “பாரா தீர்வைகள்” முறையானது சாதாரண இலங்கையருக்கு மிகவும் தெரியாத ஒரு பிற்போக்குத்தனமான முறையாகும். ஒரு பாரா தீர்வையானது எங்கள் அனைத்து இறக்குமதிகளும் உட்பட்டதும், வழக்கமான சுங்க வரிக்கு மேல் அறவிடப்படும் ஒரு வகை தீர்வையைக் குறிக்கிறது. எங்கள் இறக்குமதியில் பெரும்பாலானவை வழக்கமான சுங்க வரியை மட்டுமல்லாது, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு, “செஸ்” (ஏற்றுமதி அபிவிருத்திச் சபை வரி) மற்றும் சேர்பெறுமதி வரி (VAT) ஆகியவற்றையும் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது.

எங்கள் தற்போதைய தீர்வை முறையின் விளைவுகள்
இந்த வரிகள் குறிப்பிட்ட உள்ளூர் வணிகங்களைப் பாதுகாப்பதற்கும் இறக்குமதியைக் குறைப்பதற்கும் வருவாய் கவலைகள் மற்றும் பாதுகாப்புவாத நோக்கங்களிலிருந்து உருவாகின்றன. இருப்பினும், விரும்பத்தகாத யதார்த்தம் என்னவென்றால், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை அனைத்து இலங்கையர்களுக்கும் நம்பமுடியாத அளவிற்கு விலை உயர்ந்ததாக ஆக்குகையில் சர்வதேச வர்த்தகத்தை அது தடுக்கிறது. சுங்க வரி ஏற்கனவே 30% ஆக இருந்தாலும், பாரா கட்டணங்கள் வந்தவுடன், பெரும்பாலான பொருட்களின் மொத்த வரி - உணவு முதல் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் வரை - 50% முதல் 100% வரை எங்கும் அதிகரிக்கலாம். இது நாம் நுகர விரும்பும் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நமது திறனைக் கடுமையாக கட்டுப்படுத்துவதுடன் அதிக விலை காரணமாக அடிப்படை பொருட்களைக் கூட அடையமுடியாத நிலைக்குப் பெரும்பாலான மக்களைத் தள்ளுகின்றது.

பாரா கட்டணத்தில் காணப்படும் மற்றொரு முதன்மைப் பிரச்சினை அது பொது மக்களுக்கு வெளிப்படையானதாக இல்லாமையாகும். இந்த வரிகளின் சிக்கலான தன்மை மற்றும் எங்கள் பொருட்களின் விலையில் அவற்றின் தாக்கம் குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியாது என்றாலும், தற்போதைய முறை எங்கள் தீர்வைகளை அணுகவும் புரிந்து கொள்ளவும் விரும்பும் சாதாரண குடிமக்களுக்கு விதிவிலக்காக கடினமானதாகவும் குழப்பமானதாகவும் ஆக்குகிறது, ஏனெனில் ஒரு பொருளுக்கான மொத்தத் தீர்வையைக் கணக்கிட பயன்படுத்தப்படும் தெளிவாக இல்லை.

மேலும், இந்த சிக்கலான முறையானது புரிந்துகொள்வதற்கும், கையாளுவதற்கும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருப்பதால், தங்கள் சொந்த வணிகங்களுக்காக அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காக பொருட்கள் அல்லது காரணி உள்ளீடுகளை அனுப்ப முயற்சிக்கும் உள்ளூர்வாசிகள் தங்கள் ஏற்றுமதிக்கு எதிர்பார்க்காத பாரிய தீர்வைகளைச் செலுத்த வேண்டியுள்ளது. இது  இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகள் தேவைப்படும் உள்ளூர் வணிகங்களுக்கும் வளர்ச்சியைச் சாத்தியமற்றதாக்கி அவர்களின் செலவுகளை அதிகரிக்கின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியால் (ADB) மேற்கொள்ளப்பட்ட 2019 ஆம் ஆண்டு ஆய்வில் இது குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது, உள்ளூர் ஏற்றுமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகளை போட்டி விலையில் அணுகுவதற்கான போதிய அணுகல் இல்லாமையைத் தங்களது பிரதான சவால்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளனர் என்று தெரிவிக்கிறது.

இறக்குமதியைச் சார்ந்து இல்லாத உள்ளூர் உற்பத்தியாளர்களும் தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும் வெளிநாட்டு போட்டி இல்லாததால் அவற்றின் விலைகளைக் குறைப்பதற்கும் ஊக்கத்தைக் கொண்டிருக்கவில்லை; இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் செயற்கையாக அதிக விலை என்பதால் அவர்கள் அதிக விலையிடலாம். இதன் பொருள் என்னவென்றால், எங்கள் உள்ளூர் தயாரிப்புகள் சர்வதேச அளவில் போட்டியற்றவையாக இருக்கின்றன, எங்கள் இறக்குமதிகள் தேவையின்றி விலை உயர்ந்தவை, அதே நேரத்தில் உற்பத்தியாளர்கள் தங்கள் இலாபங்களைப் பாதுகாக்க அரசாங்கத்தை அதிகளவில் நம்பியுள்ளனர். சுருக்கமாக, இந்த முறையானது எதிர்மறையானதாகும் - இது விலைகுறைவான இறக்குமதியையும் பல வணிகங்களின் உள்ளூர் வளர்ச்சியையும் தடுக்கிறது.

நேர்மறையான சீர்திருத்தத்திற்கான வழிகாட்டிகள்

இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றி அரசாங்கம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அது நுகர்வோர் தெரிவு மற்றும் மலிவுத்தன்மையை அதிகரிப்பதோடு நமது உள்ளூர் வணிகங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும். வர்த்தக தாராளமயமாக்கல் என்பது இந்த முடிவுகளை அடைவதற்கான மிகச் சிறந்த முறைகளில் ஒன்றாகும். எங்கள் குழப்பமான அமைப்பை ஒரு சீரான தீர்வை விகிதத்துடன் மாற்றுவது இந்த பயணத்தின் முதல் முக்கியமான படியாக இருக்கலாம்.

மேலே விவரிக்கப்பட்ட பிரச்சினைகளைப் பார்க்கும்போது, ​​அதிகப்படியான சிக்கலான பாரா தீர்வை முறையின் மீதான நமது தற்போதைய நம்பகத்தன்மை நாட்டின் பொருளாதார நலன்களுக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது தெளிவாகிறது. இது வேறுபட்ட அணுகுமுறைக்கான நேரமென ஓரளவிற்கு அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. தேசிய கொள்கைக் கட்டமைப்பில் அதன் பேரினப் பொருளாதார கொள்கை கட்டமைப்பின் கீழ் “உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை குறைத்தல்” என்ற விடயம் அடங்கும். நாட்டிற்கு உண்மையான பொருளாதார நன்மைகளைப் பெறுவதற்கு தீர்வைச் சீர்திருத்தம் மிகவும் பரந்ததாக இருக்க வேண்டும், இது ஒரு அங்கமாகும்.

பாதுகாப்புவாதத்தின் நீண்ட வரலாற்றின் பின்னர் வர்த்தக தாராளமயமாக்கலுக்கான நகர்வுக்காக பெரும்பாலும் வெற்றிபெற்ற சிலி, இறக்குமதிகளுக்கு ஒரு மட்டமான தீர்வை வரியை அறிமுகப்படுத்திய பின்னர் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவித்தது. எல்லைத் தீர்வைகளை எளிதாக்குவதற்கான இந்த சீர்திருத்தம் உள்ளூர் வளங்களை சிறப்பாக ஒதுக்க வழிவகுத்தது, ஏனெனில் இது குறிப்பிட்ட கைத்தொழில்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமையளித்து நடாத்தப்பட்டமையைத் தடுத்தது. எனவே, சந்தை மிகவும் போட்டித்தன்மையுடன் வளர்ந்ததுடன் உள்ளூர் வணிகங்கள் அவர்களுக்கு தேவையான இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகளை அணுகுதல் எளிதாகியது. இது ஏற்றுமதித் துறையிலும் வளர்ச்சியை ஏற்படுத்த உதவியது, இதனால் 1990 முதல் 2003 வரையிலான மொத்த ஏற்றுமதியின் அளவு 8.1% ஆக உயர்ந்துள்ளது. ஆரம்ப மட்டமான தீர்வை வீதமானது ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தபோதிலும், தாராளமயமாக்கலை ஊக்குவிக்கும் போது அதேவேளை ஒரு சீரான வீதத்தை செயல்படுத்தியமை நேர்மறையான விளைவுகளைத் தூண்டியது. மட்டமான தீர்வை வீதம் 2003 ஆம் ஆண்டு வரை படிப்படியாகக் குறைக்கப்பட்டதுடன் சிலி இப்போது ஒரு சீரான கட்டணத்தை 6% இற்கும் குறைவாகக் கொண்டுள்ளது, மேலும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுடன் (FTA) சம்பந்தப்பட்ட  பல நாடுகளுக்கான தீர்வைகளை முற்றிலுமாக நீக்குகிறது.

இலங்கையின் விடயம் ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், தீர்வைகளை எளிதாக்குவதும் ஒருங்கிணைப்பதும் குழப்பத்தைக் குறைக்கும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும், மேலும் சிறந்த வர்த்தகத்தின் வழியில் இடையூறாக நிற்கும் தாமதங்களை அகற்றும், இது பொருளாதார வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகளைத் தருகிறது என்பது தெளிவாகிறது. விரும்பிய முடிவு அவசியமில்லை என்றாலும், இலங்கை அதன் தீர்வைகளை ஒப்பீட்டளவில் உயர் மட்டத்தில் பராமரிக்க விரும்பினால், இன்னும் அரசாங்கம் பாரா கட்டண முறையை அகற்றி, அனைத்து உள்ளூர் கைத்தொழில்களுக்கும் ஒரே அளவிலான பாதுகாப்பை உள்ளடக்கிய ஒற்றை, சீரான வீதத்தை விதிக்க முடியும். 

குறைந்த பட்சம், முறைமையில் அதிக தெளிவைக் கொண்டுவருவதன் மூலமும், ஒரு உற்பத்திக்கான மொத்த தீர்வைப் பெறுமதி குறித்த தற்போதைய நிச்சயமற்ற தன்மையை நீக்குவதன் மூலமும் எல்லையில் மிகச் சிறந்த பரிமாற்றத்தை எளிதாக்கும். இந்தச் சீர்திருத்தம் மூலம் சிலியில் செய்ததைப் போல உள்ளூர் நிறுவனங்களுக்கான இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடுகளுக்கான அணுகலை அதிகரிப்பதன் மூலம் நமது உள்ளூர் வணிகங்களையும் ஏற்றுமதித் துறையையும் மேம்படுத்த முடியும். எவ்வாறாயினும், நீண்ட காலமாக, வரி விகிதம் இன்னும் நம்பமுடியாத அளவிற்கு அதிகமாக இருந்தால், ஒரு சீரான தீர்வையானது ஒரு தலைப்பட்சமாக பெரிதும் மேம்படுத்தாது; இலங்கையும் ஒட்டுமொத்த கட்டண விகிதத்தை படிப்படியாகக் குறைக்க வேண்டும் அத்துடன் உண்மையிலேயே புரிந்துகொள்ளக்கூடிய வகையில் புரிந்துகொள்ளக்கூடிய தீர்வை முறையின் நன்மைகளுக்காக வர்த்தகத்தை எளிதாக்க பிற உத்திகளில் ஈடுபட வேண்டும்.

அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், இது மிகவும் செயல்பாட்டு மற்றும் பயனுள்ள தீர்வை முறையை நோக்கிய ஒரு நேர்மறையான பாதையின் தொடக்கமாக இருக்கலாம். "சில தடைகளைத் தகர்க்க நாங்கள் தயாரா?" என்பது கேள்வியாகும்.

வரிகள் மற்றும் தீர்வைகள் பற்றிய நன்கு முன் கூட்டிய திட்ட மிடப்படாத சட்டத்தின் விளைவுகள்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
Tariffs and the law of unintended consequences

– அனீதா வருசவிதாரண

திட்டமிடப்படாத விளைவுகளின் சட்டம் எடம் ஸ்மித்துக்கு முந்தைய ஒரு கோட்பாடாகும், ஆனால் சமூகவியலாளர் ராபர்ட் கே. மேர்டன் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டது. சுருக்கமாக, செட்ரிஸ் பரிபஸின் கோட்பாட்டினை (பிற காரணிகளை நிலையானதாக வைத்திருத்தல்) ஒரு சந்தை சூழ்நிலையில் அடைய முடியாது என்பதால், விளைவுகளின் தொகுப்பை உருவாக்க அரசாங்கங்கள் தலையிடுவதன் பெறுபேறாக எதிர்பாராத பின்விளைவுகள் ஏற்படுகின்றன.

காலனித்துவ இந்தியாவும் நாகப் பாம்புகளும்

இது பிரித்தானியர் முதன்முதலில் இந்தியாவை காலனித்துவப்படுத்திய காலத்திலிருந்தே காணப்பட்ட இந்த சட்டம் ‘கோப்ரா எஃபெக்ட் (Cobra Effect)’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்த விஷப் பாம்புகள் குறித்து ஆங்கிலேயர்கள் புரிந்துகொள்ளக்கூடிய அக்கறை கொண்டிருந்தனர், நாகப்பாம்புகள் தெளிவாக சில கவலைகளுக்குக் காரணமாக இருந்தன.  இதற்கு அவர்கள் முன்வைத்த தீர்வு என்னவென்றால், கொல்லப்பட்ட ஒவ்வொரு நாகப்பாம்பிற்கும் ஒரு வெகுமதியை வழங்கியமை அருகிலுள்ள எந்தவொரு நாகத்தையும்  கைப்பற்றி கொல்ல உள்ளூர் மக்களுக்கு தெளிவான ஊக்கத்தை வழங்கியது. இது குறுகிய காலத்தில் நன்றாகச் செயற்பட்டாலும், ஆர்வமுள்ள நபர்கள் நாகப்பாம்புகளைத் தீவிரமாக இனப்பெருக்கம் செய்கிறார்கள் என்பதை ஆங்கிலேயர்கள் மெதுவாக உணர்ந்தனர்; இது ஊக்குவிப்பு வெகுமதிகளைச் சேகரிக்கும்  மிகவும் இலாபகரமான வணிகத்தை உருவாக்கியது. இது தொடர்பாகத்  தெளிவடைந்ததுடன், பிரித்ததானியர்கள் ஊக்குவிப்பு வெகுமதிகளை அகற்றினர். அப்போது இது ஒரு இலாபகரமான முயற்சியாக இல்லாதிருந்தமையால், இனப்பெருக்கம் செய்து வளர்த்தவர்கள் தங்கள் எல்லா நாகப்பாம்புகளையும் விடுவித்தனர். இதன் இறுதி விளைவாகப் பொது நாகப்பாம்புகளின் தொகை அதிகரித்தமையானது இது எதனை அடையவேண்டுமெனத் தலையீடு மேற்கொள்ளப்பட்டதோ அதற்கு முற்றிலும் எதிரானதாகும்.

இது ஒரு நல்ல கதைக்கு வழிவகுக்கும் அதே வேளையில், திட்டமிடப்படாத விளைவுகளின் சட்டத்தின் பொருளாதார யதார்த்தங்கள் பெரும்பாலும் மிகவும் மோசமானவையாகவுள்ளன. சந்தையில் தலையீடுகள் பெரும்பாலும் நன்கு திட்டமிடப்பட்டவையாகவிருந்த போதிலும் பின்வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன. இதற்கு ஒரு பிரகாசமான உதாரணம் தீர்வைவரிகள் விடயமாகும். ஃபோர்ப்ஸ் சஞ்சிகையானது,  அண்மையில் அமெரிக்காவில் விதிக்கப்பட்ட ஒரு சலவை இயந்திரங்களுக்கான தீர்வையின் எதிர்பாராத விளைவுகளை விவரித்து ஒரு கட்டுரையை வெளியிட்டது. அமெரிக்காவில் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதனையும், அந்தக் கைத்தொழிலில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதனையும் கருத்திற்கொண்டே இந்தத் தீர்வை விதிக்கப்பட்டது. அந்த இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஒருவர் தீர்வையின் செயல்திறனை மதிப்பீடு செய்தால், தீர்வைவரியானது ஒரு மகத்தான வெற்றியாகும்; அமெரிக்க துணிகழுவுதல் மற்றும் உலர்த்துதல் தொழில்துறையானது சுமார் 1,800 புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கியது. இது ஒரு வெற்றிக் கதையாக எளிதில் எழுதப்படலாம்.


சலவை இயந்திரங்களின் மீதான திட்டமிடப்படாத விளைவு (Cobra Effect)

எவ்வாறாயினும், இங்கே கவனம் தயாரிப்பாளர் மீது மட்டுமே உள்ளதுடன் நுகர்வோர் கதையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல் திட்டமிடப்படாத விளைவு என்னவென்றால், இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் இப்போது அதிக விலை கொண்டவை என்பதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் விற்பனையை இழக்க நேரிடும் என்ற அச்சமின்றி பாதுகாப்பாக தங்கள் விலையை உயர்த்த முடிந்தது. இரண்டாவது திட்டமிடப்படாத விளைவு என்னவென்றால், உலர்த்திகளும் அதிக விலை கொண்டதாக மாறின. அமெரிக்காவில் சலவை இயந்திரங்களுக்கு ஒரு நிரப்பு நன்மை என்ற வகையில், உலர்த்தி உற்பத்தியாளர்கள் தங்கள் விலையை உயர்த்தவும், இலாபத்தை அதிகரிக்கவும் சரியான சாளரமாக இதைக் கண்டனர் (ஆடைத் தொழில்துறை இலங்கையை இந்த எதிர்பாராத விளைவுகளிலிருந்து காப்பாற்றும்).

 

இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஃபோர்ப்ஸின் கருத்துப்டி இதனால், அமெரிக்க நுகர்வோர் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்துள்ளனர். இந்த விலைவாசி அதிகரிப்பு மற்றும் நுகர்வோருக்கு ஏற்படும் செலவு ஆகியவற்றை 1,800 தொழில்வாய்ப்புக்களை உருவாக்கியதன் மூலம் நியாயப்படுத்த முடியும் என்று ஒருவர் வாதிடலாம். உண்மை என்னவென்றால், ஒவ்வொரு வேலையும் அதிகரித்த நுகர்வோர் செலவில் 815,000 அமெரிக்க டொலர்களுக்கு சமமானதாகும். இந்த தீர்வைக் கொள்கையானது உள்ளூர் தொழில்துறையை தங்கள் சொந்த நுகர்வோரின் செலவில் திறம்படப் பாதுகாக்கிறது.


அமெரிக்காவில் சலவை இயந்திர விலைகளை இலங்கையர்கள் ஏன் கவனிக்க வேண்டும்?

இது திட்டமிடப்படாத விளைவுகளுக்கு ஒரு துரதிர்ஷ்டவசமான எடுத்துக்காட்டாகத் தோன்றுகிறது என்பதையும், உள்நாட்டு நுகர்வோருக்கு இங்கு பாதிக்கப்பட்டனர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும், சராசரி இலங்கை இதனை ஏன் கவனிக்க வேண்டும்? எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களிடம் சன்லைட் சவர்க்காரமும் ஆடைத்துறையும் உள்ளன.

இலங்கை நுகர்வோர் கவலைப்பட வேண்டிய காரணம் என்னவென்றால் கடல் கடந்து அமெரிக்காவில் நிகழ்ந்த  அதே எதிர்பாராத விளைவுகள் இங்கே, நம் சிறிய தீவாகிய தேசத்திலும் நடைபெறுவதனால் ஆகும். தீர்வைவரி என்பது நீண்டகாலமாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் விருப்பமான கருவியாகும். தீர்வையானது ஆவணங்களில் மிகவும் நன்றாக இருக்கும், அந்த ஆவணமானது ஒரு தேர்தல் வாக்குறுதி அறிக்கை என்று குறிப்பிட்டால் நல்லது. ‘நாங்கள் எங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்போம்’ என்பது பல வாக்காளர்களின் மனதைக் கவரும் ஒரு வாக்குறுதியாகும். சிறந்த அச்சில் ‘உள்நாட்டு நுகர்வோரின் செலவில்’ என்பது விளம்பரப்படுத்தப்படும் ஒன்றல்ல, ஆனால் அது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

வீட்டுப் பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் உணவு வரையிலான பொருட்களுக்குத் தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக் காலணிகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் போன்ற வேறுபட்ட பொருட்களின் விலை இதனால் பாதிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு எவ்வாறு அதிகமாக உள்ளது என்பது குறித்து முழு நாடும் முறைப்பாடு செய்கின்றது, நியாயமற்ற முறையில் அதிக தீர்வைகள் இதற்குப் பின்னால் உள்ள இயக்கிகளில் ஒன்றாகும். துரதிர்ஷ்டவசமாக எங்களைப் பொறுத்தவரை, இந்தத் தீர்வைகளை விதிப்பது அமெரிக்க நுகர்வோர் எதிர்கொண்ட அதே தொடர்ச்சியான எதிர்பாராத விளைவுகளை உருவாக்குகிறது. சராசரியாக இலங்கையரொருவர் வாராந்தம் பொருள்வாங்கி அதற்காகச் செலுத்தும் விலையானது, அது தெல்கந்தை சந்தையாகவிருப்பினும் சரி, நெருங்கிய பல்பொருள் அங்காடி அல்லது சந்தியிலுள்ள கடை எதுவாகவிருப்பினும் தீர்வைகளினால் பாதிக்கப்படுகின்றது. உருளைக்கிழங்கு, அது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதற்கு இருக்க வேண்டிய விலையைவிட அதிக விலை கொண்டதாக இருக்கும், ஏனென்றால் தீர்வை வரிகள் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலையை உயர்த்துகின்றன, இது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நுகர்வோர் இழப்புடன் விலைகளை உயர்த்த அனுமதிக்கிறது.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தீர்வைகள் 45% முதல் 107.6% வரை இருக்கலாம். நமது பொருளாதாரத்தில் தீர்வைகளின் பங்கு,  அவற்றை விதிப்பற்குப் பின்னால் இருக்கும் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட காரணம், தீர்வையின் பின்விளைவுகள் (அவை நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டியதுடன் அவற்றைத் தள்ளுபடி செய்யவோ புறக்கணிக்கவோ முடியாது)  மற்றும் அவற்றை அகற்றுவதற்குத் துரிதமானதொரு பொறிமுறை ஆகியவற்றைப் பற்றித் தீவிரமாக மீளாய்வு செய்யப்பட வேண்டும். 

இறக்குமதி வரி எவ்வாறு வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
How import taxes drive up the cost of living

- ரவி ரத்னாசபபதி

" இந்தியா மற்றும் சீனா போன்ற ஜாம்பவான்களுக்கு பொருளாதாரத்தைத் திறப்பதற்கு முன்பு, தொழில்துறையில் ஈடுபட்டுள்ள உள்ளூர் நிறுவனங்களைப் பாதுகாக்க ஒரு ‘எதிர்மறை உற்பத்திப் பட்டியலை’ அறிமுகப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் தலையீட்டை இலங்கை இனிப்புப்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கமானது (LCMA) தீவிரமாக நாடுகிறது." - டெய்லிஎஃப்டி 2017 செப்டம்பர், 25

மேற்கூறியவை இலங்கையில் பொதுவாக நடைபெறும்  ஒரு நிகழ்வாகிய - வெளிநாட்டுப் போட்டிகளிலிருந்து ஒரு கைத்தொழில்துறை பாதுகாப்பைத் தேடுதலுக்குரிய ஒரு உதாரணமாகும். இந்த பாதுகாப்பானது பொதுவாக ஒரு தீர்வையின் வடிவத்தை, அதாவது   இறக்குமதி செய்யப்பட்ட தயாரிப்புக்கு விதிக்கப்படும் ஆனால், அதன் உள்நாட்டு பிரதியீட்டிற்குப் பொருந்தாத   வரியின் வடிவத்தை எடுக்கும். மேற்கூறிய உதாரணத்தில், ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டாலும் கூட, தொழில்துறையினர் அனுபவிக்கும் தீர்வைப் பாதுகாப்பைத் தொடர வேண்டும் என்று இலங்கை இனிப்புப்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கமானது (LCMA) கோருகிறது. (ஒரு FTA இன் “எதிர்மறை பட்டியலில்” உள்ள ஒரு பொருள் FTA க்கு உட்பட்டது அல்ல). உதாரணமாக, இறக்குமதி செய்யப்படும்         விசுக்கோத்துக்களுக்கு மொத்தம் 107% வரி விதிக்கப்படுகிறது, விசுக்கோத்துக்கள் எதிர்மறை பட்டியலில் இருந்தால், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இருந்தபோதிலும் இந்த வரி தொடரும்.

தீர்வைவரி விதிக்கப்பட்டாலும், இது பொதுவாக வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் தயாரிப்புக்கு வசூலிக்கும் விலையை குறைக்காது. எனவே இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தியின் உள்நாட்டு விலை தீர்வையின் அளவுக்கு  உயர்கிறது.


இந்த இறக்குமதிகளுடன் போட்டியிடும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இறக்குமதி வரியை செலுத்த வேண்டியதில்லை, எனவே இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தியை விட ஒரு நன்மை இருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விலை உயரும்போது, ​​உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தங்கள் சொந்த விற்பனை விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளனர், ஏனெனில் போட்டியிடும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இப்போது விலை அதிகம் ஆகும்.

உள்நாட்டுத் தயாரிப்பாளர் தனது விலையை உயர்த்துவாரா? ஆம், இல்லையெனில் எந்த அர்த்தமும் இல்லை. உள்நாட்டு உற்பத்தியாளர் தனது விலைகளை அதே மட்டத்தில் நிர்ணயித்தால், இறக்குமதிக்கு வரி விதிக்கப்படாவிட்டால், இறக்குமதியிலிருந்து தீர்வைப் பாதுகாப்பைப் பெறுவதில் எந்த அர்த்தமும் இருக்காது. உள்நாட்டு உற்பத்தியாளர் தனது தயாரிப்பை அதிக விலைக்கு விற்க உதவுவதே தீர்வையின் நோக்கமாகும். உள்நாட்டு உற்பத்தியாளர் தீர்வையின் விளைவாக முன்னரைவிடச் சிறந்த பயனைப் பெறுவார்.

நுகர்வோருக்கு என்ன நடக்கும்?

 தீர்வை விதிப்பதன் மூலம் உற்பத்தியின் உள்நாட்டு நுகர்வோர் சமமாகப் பாதிக்கப்படுகின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்ளூர் தயாரிப்புக்கள் இரண்டிற்குமே அவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டும்.

வேறு வசனங்களில் கூறுவதானால், உள்நாட்டு தொழில்துறைக்கான பாதுகாப்பு உண்மையில் உள்நாட்டு நுகர்வோரால் உயர்ந்த விலைகள் என்ற வடிவத்தில் செலுத்தப்படுகிறது.

தீர்வையை விதிக்கும் அரசாங்கத்தின் நிலை என்ன?

உள்ளூர் உற்பத்தியில் அவர்கள் சேகரிக்கவில்லை என்றாலும், எந்த அளவு இறக்குமதி செய்யப்பட்டாலும், அரசாங்கமானது தீர்வை வருமானத்தைச் சேகரிக்கிறது. இறக்குமதியின் விலையை உயர்த்துவதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளருக்கு அரசாங்கம் உருவாக்கும் நன்மை உற்பத்தியாளரால் சேகரிக்கப்படுகிறது. இந்த மிகை "வாடகை" என்று அழைக்கப்படுகிறது, அவற்றில் மேலும் கீழே தரப்பட்டுள்ளது.

 தீர்வையை விதித்ததால், எங்களுக்கு இரண்டு உள்நாட்டு வெற்றியாளர்கள் (உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் அரசாங்கம்) மற்றும் ஒரு உள்நாட்டுத் தோல்வியடைந்தவரும் (உள்நாட்டு நுகர்வோர்) உள்ளனர்.

போட்டியிடும் இறக்குமதிகள் மீதான தீர்வைக்கு நுகர்வோரிடமிருந்து அதிக விலை வசூலிக்கக்கூடிய உள்ளூர் உற்பத்தியாளர் ஒரு "வாடகையை" அனுபவிப்பதாகக் கூறப்படுகிறது. பொருளாதாரத்தில், ஒரு “வாடகை” என்பது கண்டுபிடிக்கப்படாத வெகுமதியாகும். உற்பத்தியாளர்  அதிக விலை வசூலிக்க முடியும் என்பது உயர்ந்த தரம் அல்லது சேவையின் காரணமாக அல்ல, மாறாக அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரியினாலாகும்.

சிறந்த தரம் காரணமாக தயாரிப்பாளருக்கு அதிக விலை வசூலிக்க முடிந்தால், மலிவான இறக்குமதிகள் கிடைத்தாலும் கூட, தயாரிப்பாளர் அதிக விலையைப் பெறுவார். இங்கு ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது.

நுகர்வோர் அதிக விலையுயர்ந்த பொருளை மட்டுமே வாங்குவர், அதே நேரத்தில் அவர்கள் பெறுவதை மதிப்பிட்டால் மட்டுமே குறைந்த விலையிலான பொருட்கள் கிடைக்கின்றன. உற்பத்தியாளர் தமது உற்பத்தி சிறந்தது மற்றும் அதிக விலை கொடுக்க வேண்டியது என்று நுகர்வோரை நம்ப வைக்க கூடுதலாக எதையாவது செய்ய வேண்டும்.

ஒரு தீர்வையானது இறக்குமதியின் விலையை உயர்த்தும்போது, ​​உள்ளூர் உற்பத்தியாளர்கள் நுகர்வோருக்கு பெறுமதியை அதிகரிக்காமல் அதிக விலைகளை வசூலிக்க முடியும். ஒரு தெரிவினைக் கொடுத்தால், நுகர்வோர் மலிவான மாற்று வழிகளைத் தேர்வுசெய்யலாம் - ஆனால் மாற்றுவழி இனி மலிவானதல்ல என்பதை தீர்வையானது உறுதி செய்கிறது. இதனால் நுகர்வோர் விரும்பாவிட்டாலும் மாற்றுவழி இல்லாததால், அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால்தான் இந்த உதாரணத்தில் உயர்மதிப்பானது உழைக்கப்படாதது என்று கூறப்படுகிறது. நுகர்வோர் சிறந்த பெறுமதியை உணராதபோதிலும் அதிக விலையைச் செலுத்துகிறார்கள்.

இதனால் உற்பத்தியாளர்கள் நுகர்வோரின் செலவில் இலாபமடைகின்றனர். முன்னர் குறிப்பிட்டபடி, உள்நாட்டு தொழில்களின் பாதுகாப்பிற்காக பணம் செலுத்துவது உள்நாட்டு நுகர்வோர் (வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் அல்ல) ஆவர். நிகர தாக்கம் என்பது நுகர்வோரிடமிருந்து உற்பத்தியாளருக்கு செல்வத்தை மாற்றுவதாகும், இது தீர்வையால் வசதி செய்யப்படுகிறது. இது சிறந்ததொரு கொள்கையாகுமா?

இது ஒரு சில தொழில்களுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், அது முக்கியமானதல்ல, ஆனால் இலங்கையில் இது எல்லாவற்றிலும் பரவலாக உள்ளது. பாதிக்கப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட பொதுவான வீட்டு பொருட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. இது ஒரு தெரிவு மட்டுமே-ஏனைய பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகமாக உள்ளது என்பதை இது விளக்குகிறது. உணவு (பழம், இறைச்சிகள், பாஸ்தா, பழப்பாகு) முதல் கழிப்பறைப் பொருட்கள் (சவர்க்காரம், ஷாம்பூ, பற்பசை) முதல் வீட்டு பொருட்கள் வரை அனைத்து தேவையான பொருட்களுக்கும் 62% -101% வரை வரிகள் அறவிடப்படுகின்றன.

Untitled design (11).png

உள்நாட்டுத் தொழில்களை ஆதரிப்பதற்காக இலங்கை நுகர்வோர் அதிக வாழ்க்கைச் செலவை அனுபவிக்கின்றனர். ஒரு தொழில்துறை தளத்தை உருவாக்க உள்ளூர் உற்பத்தியாளர்களை ஆதரிப்பது நீண்ட காலத்தில் வளர்ச்சியை துரிதப்படுத்துமா என ஒரு விவாதம் உள்ளது.

யப்பான், கொரியா மற்றும் தாய்வான் ஆகியன கைத்தொழில் கொள்கையை (IP) கடைப்பிடித்தன, ஆனால் கொள்கையின் ஆதரவாளர்கள் கூட சரியான கைத்தொழில்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கவனிப்பு தேவை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். யப்பான் மற்றும் கொரியாவில் உருக்கு, கப்பல் கட்டுதல், கனரக மின் உபகரணங்கள், இரசாயனப் பொருட்கள் மற்றும் பின்னர் வந்த கார்கள் ஆகியன முக்கிய தொழில்களாகும். கனரக மற்றும் இரசாயனத் தொழில்கள் மற்றும் இலத்திரனியல் கைத்தொழில்களுக்குச் செல்வதற்கு முன்பு தாய்வானில் இலகு உற்பத்தி (மின் உபகரணங்கள், துணி) இருந்தது.

சவர்க்காரம், ஷாம்பூ, சலவை தூள், தரை மினுமினுப்பாக்கி, பாஸ்தா, பாலாடைக் கட்டி மற்றும் விசுக்கோத்துக்கள் போன்ற கழிப்பறை, வீட்டு சுத்திகரிப்புப் பொருட்கள் மற்றும் உணவு ஆகியவற்றில் இலங்கை இதைப் பின்பற்ற விரும்புகிறது.

Untitled design (12).png

வெற்றியடைவதற்கு, கைத்தொழில் கொள்கைகள் பொருளாதாரத்தில் ஒரு கட்டமைப்பு மாற்றத்தை வளர்க்க வேண்டும், இது தொழில்வாய்ப்புக்களை, குறிப்பாக அதிக வினைத்திறன் வாய்ந்த சிறந்த தொழில்வாய்ப்புக்களை  விரைவாக உருவாக்க வழிவகுக்கிறது. சரியான கைத்தொழில்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானதாகும்.

"நாட்டின் தொழில்நுட்ப இயல்திறன்கள் மற்றும் உலகச் சந்தை நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, இலக்குத் தொழில்கள் எவ்வளவு யதார்த்தமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்பது முக்கியமானதாகும்" [1]

க்ருக்மேன் [2] துறைகளைத் தேர்ந்தெடுப்பதில் கைத்தொழில் கொள்கை வகுப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட சில அளவுகோல்களை சுருக்கமாகக் கூறுகிறார்:

ஒரு தொழிலாளிக்கு அதிக பெறுமதி சேர்க்கப்பட்டவை. பணியாளருக்கு அதிக  பெறுமதி சேர்க்கும் வணிகங்களுக்கு வளங்கள் பாய்ந்தால் மட்டுமே உண்மையான வருமானம் உயர முடியும்.

  1. ஒரு தொழிலாளிக்கு அதிக பெறுமதி சேர்க்கப்பட்டவை. பணியாளருக்கு அதிக  பெறுமதி சேர்க்கும் வணிகங்களுக்கு வளங்கள் பாய்ந்தால் மட்டுமே உண்மையான வருமானம் உயர முடியும்.

  2. உருக்கு மற்றும் குறைகடத்திகள் போன்ற இணைப்புத் தொழில்கள். பிற தொழில்களால் உள்ளீடுகளாகப் பயன்படுத்தப்படும் கைத்தொழில்கள் கைத்தொழில்மயமாக்கலின் சுழற்சியை உருவாக்க முடியும். யப்பானில் மலிவான, உயர்தர உருக்கானது, மூலப்பொருள் தயாரிக்கும்  கைத்தொழில்கள்-கப்பல்கள், மோட்டார்வாகனங்கள், தண்டவாளங்கள், என்ஜின்கள், கனரக மின் சாதனங்கள் ஆகியவற்றில் ஒரு போட்டி நன்மையைக் கொடுத்தது.

  3. உலக சந்தைகளில் தற்போதைய அல்லது எதிர்கால போட்டித்திறன். கைத்தொழிலானது இந்த பரீட்சையைச் சந்திக்க முடிந்தால், வளங்கள் திறமையாக ஒதுக்கப்படுகின்றன என்று நாம் கருதலாம். இணைப்பு நன்மைகள் பாய்வதற்கு போட்டித்திறன் முக்கியமானது.


அளவிலான பொருளாதாரங்களை அடைவதற்கு தெரிவுசெய்யப்பட்ட கைத்தொழில்கள் ஏற்றுமதியை இலக்காகக் கொள்ள வேண்டும் (விசேடமாக இல்லாவிட்டாலும்) - ஏனெனில் இது "அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட நிறுவனங்களின் செயல்திறனைத் தீர்மானிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு உறுதியான அளவுகோலை" வழங்குகிறது [3]. இலத்தீன் அமெரிக்காவில் கைத்தொழில் கொள்கை தோல்வியடைவதற்கு ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் ஏற்பட்ட தோல்வியானது முக்கிய காரணமாகும். (சாங், 2009)

ஏற்றுமதியை நோக்கிய தன்மை கொண்ட போட்டித்தன்மையையும் உறுதி செய்கிறது. கொள்கையின் நோக்கம் திறமையின்மையைப் பாதுகாப்பதல்ல, ஆனால் உற்பத்தித்திறனை மேம்படுத்துதலாகும்.

எனவே தொழில்துறைக்கான ஆதரவு நிபந்தனைக்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

"கைத்தொழில் கொள்கையின் முடிவுகள் (அல்லது உண்மையில் எந்தவொரு பொதுவான கொள்கையின்) விமர்சன ரீதியாக விரும்பிய முடிவை எவ்வளவு திறம்பட அரசு கண்காணிக்க முடியும் என்பதிலும், வளர்ந்து வரும் பெறுபேறுகளைக் கருத்திற்கொண்டு ஒதுக்கீடு மற்றும் உதவி விதிமுறைகளை மாற்றுவதிலும் தங்கியுள்ளது" [4]

யப்பான் மற்றும் கொரியாவில் கலந்துரையாடல் கவுன்சில்கள் அமைக்கப்பட்டன, அவை கைத்தொழிலில் இலக்குகளை நிர்ணயிக்கும். இலக்குகள் கடுமையானவை என்பதை உறுதிப்படுத்த அவர்கள் சுயாதீன தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிறரையும் ஈடுபடுத்தினர்.

செயல்திறன் கண்காணிக்கப்படுவதுடன் இலக்குகள் திருத்தப்படும். ஒரு கொள்கையானது பயனற்றதாகக் காணப்படும் போது அது திருத்தப்படும். கைத்தொழில் கொள்கை என்பது வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், தோல்வியுற்றவர்களை வெளியேற்றுவதும் ஆகும்.

"கைத்தொழில் கொள்கையின் வெற்றியானது, பல்வேறு கொள்கை வழிமுறைகள் (தீர்வைகள், மானியங்கள், நுழைவுத் தடைகள்) மூலம் அது உருவாக்கும் வாடகைகளைப் பெறுபவர்களை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் எவ்வளவு விருப்பமும் திறமையும் கொண்டது என்பதில் தங்கியுள்ளது. கைத்தொழில் கொள்கையை நடத்துவதில் தவிர்க்க முடியாத சந்தை ஒழுக்கத்தை இடைநிறுத்துவது என்பது அரசாங்கம் ஒரு ஒழுக்கத்தை நிலைநாட்டுபவரின் பங்கை வகிக்க வேண்டும் என்பதே கருத்தாகும் ”[5].

கைத்தொழிற்துறைக்கான ஆதரவு குறித்து பக்கச்சார்பற்ற முடிவுகளை எடுப்பதற்கு அரசியல் அழுத்தத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு அதிகாரத்துவம் தேவைப்படுகிறது - மேலும் செயல்திறனைப் பொறுத்து ஆதரவை மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ வேண்டும்.

"அரசாங்கம் அதன் பணயக்கைதியாக மாறாமல் தனியார் துறையுடன் எவ்வளவு நெருக்கமாக தொடர்பு கொள்கிறது என்பது மிகவும் முக்கியமானதாகும்." [6]

வெற்றிகரமான கைத்தொழில் கொள்கை என்பது கைத்தொழில் மற்றும் அரசிற்கிடையிலான ஒரு அதிநவீன கூட்டாண்மை என்பது தெளிவாகிறது, இது போட்டி மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் நடப்பது கிழக்கு ஆசியாவைப் போலல்லாமல் இலத்தீன் அமெரிக்காவைப் போன்றதாகும்.

"குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் இறக்குமதி மாற்றுக் கொள்கைகளுக்கு ஒரு கெட்ட பெயர் கிடைத்தது, ஏனெனில் உருவாக்கப்பட்ட தொழில்கள் பெரும்பாலும் பாதுகாப்பின் விளைவாக மட்டுமே தப்பிப்பிழைத்தன. நாடுகள் இடைநிலை பொருட்களைப் பாதுகாப்பது மிகவும் விலை உயர்ந்ததாகும், ஏனென்றால் அது பொருட்களின் தரத்தைக் குறைத்து உற்பத்திச் சங்கிலியைக் குறைவாகப் போட்டிக்கு உட்படுத்தியது. இந்த வகையான பாதுகாப்புவாதத்திற்கு நாடுகள் பெரும்பாலும் அதிக விலை கொடுத்தன, மேலும் இந்த பாதுகாப்பைப் பராமரிப்பது பெரும்பாலும் ஊழலுடன் தொடர்புடையதாகும். ” [7]


[1] Chang, H. J, 2006. Industrial policy in East Asia – lessons for Europe. An industrial policy for Europe? From concepts to action EIB Papers, [Online]. Vol 2 No.6, 106-132. (Accessed 07 January 2019)

[2] Paul R. Krugman, 1983. Targeted Industrial Policies: Theory and Evidence. [Online] (Accessed 07 January 2019)

[3] Ibid

[4] M Khan, 2018. The Role of Industrial Policy:Lessons from Asia. [Online] (Accessed 07 January 2019)

[5] Ibid

[6] Ibid

[7] Joseph E. Stiglitz. Industrial Policy, Learning, and Development. [Online] (Accessed 07 January 2019)

அளவுக்கதிகமான வரிகள்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
A Belly Full of Taxes

- டில்ஷானி ரணவக

புத்தாண்டு வாரம் முடிவடைந்து வருவதால், உங்கள் உணவுப் பட்டியலுக்கான மொத்தத் தொகையானது மிகவும் அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். பண்டிகை காலத்தை நீங்கள் இதற்குக் காரணம் காட்டியிருக்கலாம், மேலும் இலங்கையில் உணவு உண்மையில் மிகவும் விலை உயர்ந்ததாகும். இருப்பினும், இது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளீர்களா? இவ்வளவு அத்தியாவசியமான ஒன்றுக்கு நாம் ஏன் இவ்வளவு பணம் செலுத்துகிறோம்?

உங்கள் குடும்பம் வாங்கும் ஒவ்வொரு உணவிற்கும், நீங்கள் இரண்டாவது உணவுக்கு (ஒரு தனிநபருக்காக) மீண்டும் அரசாங்கத்திற்கு விலை செலுத்துகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் குடும்பத்தின் அன்றாட நுகர்விற்காக  நீங்கள் வாங்கும் உணவுப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியாதிருக்கலாம்! நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு  கொள்வனவுக்கும் செலுத்தும் மறைமுக வரி நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம்?

ஒரு குடும்பத்தில் நான்கு பேரின் சமநிலையான உணவுக்கான மளிகைப் பட்டியலைப் பார்ப்போம் (உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) பரிந்துரைத்த அளவுகள்).

Balanced+Meal+tax+figures.png

இந்த புள்ளிவிவரங்களை ஒருவர் ஆராயும்போது, ​​இந்த சிறிய கூடை மளிகைப் பொருட்களில் மட்டுமே நாங்கள் அரசாங்கத்திற்கு ரூபா 150 இற்குமதிகமான தொகையை வரி வடிவில் செலுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமானது. அது மதிய உணவுக்கு நீங்கள் வாங்கியிருக்கக்கூடிய ஒரு அரிசிப் பொதிக்குச் சமமானதாகும்!

இரண்டு முக்கிய காரணங்களுக்காக வரி விதிக்கப்படுகிறது; அவை அரசாங்க வருவாயின் முக்கிய ஆதாரமாக இருப்பதுடன் அவை உள்ளூர் உற்பத்தியாளர்களை இறக்குமதிப் போட்டியில் இருந்து பாதுகாக்க முடியும்.

இலங்கையைப் பொறுத்தவரையில், அரசாங்க வருவாயில் 80% மறைமுக வரி மூலம் வசூலிக்கப்படுகிறது. வருமானத்திற்கு விதிக்கப்படும் வரிகளுக்கு மாறாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மறைமுக வரி விதிக்கப்படுகிறது.

உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாத்து பலப்படுத்தும் அரசாங்கத்தின் நோக்கத்தையே நுகர்வுப் பொருட்களின் மீதான இத்தகைய கடுமையான வரிகளை நியாயப்படுத்துவதற்கான ஒரு வாதமாக முன்வைக்கின்றனர். ஒரு தீர்வையை விதிக்கும்போது, ​​இறக்குமதியின் விலை அதிகரித்து உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் மலிவான மாற்றுப்பொருளாக இருக்கும் போட்டிக்கு எதிராக போட்டியிட வாய்ப்பளிக்கிறது. உதாரணமாக, ஒரு கிலோ பச்சை போஞ்சிக்கு நாட்டின் எல்லையில் 101% வரி விதிக்கப்படுகிறது (செலவு, காப்புறுதி மற்றும் சரக்கு (CIF) விலை). இதன் பொருள் நீங்கள் இறக்குமதி செய்யப்பட்ட பச்சை போஞ்சியை வாங்கினால், பொருளின் உண்மையான மதிப்பின் இரு மடங்கு விலையை நீங்கள் செலுத்த வேண்டும்.

இது உள்ளூர் தயாரிப்பாளர்களை ஈர்க்கிறது, ஏனெனில் அவர்கள் அதே நன்மைக்காக ஒப்பீட்டளவில் குறைந்த விலையை வழங்க முடியும். இந்தக் கொள்கைகள் உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு உதவியாகக் காணப்பட்டாலும், அவை நிச்சயமாக நீண்ட காலத்திற்கு உதவாது.

நுகர்வோர் தோல்வியடைகின்றனர்

உள்ளூர் உற்பத்தியாளர்கள் மலிவான இறக்குமதியை எதிர்த்துப் போட்டியிட உதவும் வகையில் தீர்வைகள் விதிக்கப்படும் போது, ​​உள்ளூர் உற்பத்தியாளர்கள் திறமையாகவும், உற்பத்தித் திறனுடனும்  இருப்பதற்காக அனைத்து சந்தை சலுகைகளையும் அரசாங்கம் திறம்பட நீக்குகிறது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான தீர்வைகள் அவற்றின் பிரதான போட்டி உள்நாட்டுப் பொருட்களை விட அதிக விலை கொண்டன என்பதை உறுதிப்படுத்துகிறது.

இதன் விளைவாக, நீங்களும் நானும், உள்ளூர் நுகர்வோர் இரண்டு தடவை இழக்கிறோம். முதலாவதாக, நாங்கள் உள்ளூர் தயாரிப்புகளை வாங்க விரும்பினால், உள்ளூர் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு உயர் தரமான, சிறந்த பொருளைக் கொடுப்பதற்கு எந்த காரணமும் இல்லை. இரண்டாவதாக, நாங்கள் உள்ளூர் உற்பத்தியில் அதிருப்தியடைந்து, இறக்குமதி செய்யப்பட்ட மாற்றீட்டை வாங்க விரும்பினால், இந்தப் பொருள் அதிக தீர்வைகளுக்கு உட்படுத்தப்படுவதால் நாம் அதிக விலை கொடுக்க வேண்டும்.

இறக்குமதியின் அதிக விலை இறக்குமதி செய்யப்பட்ட பொருளின் இறுதி விலைக்கும் உள்ளூர் பொருளுக்கான விலைக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளியை உருவாக்குகிறது என்பதன் மூலம் நுகர்வோருக்கு இந்த இழப்பு அதிகரிக்கிறது. இந்த இடைவெளியை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இலாப விகிதமாக மாற்ற முடியும், ஏனெனில் இறக்குமதி செய்யப்பட்ட மாற்றீட்டில் விதிக்கப்பட்ட உயர் தீர்வையினளவுக்கு  தரத்தை மேம்படுத்தாமல் அவர்களின் பொருளின் விலையை அதிகரிக்க முடியும்.

நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமா?

ஊக்குவிப்புக்கள் இல்லாததால் எங்கள் உற்பத்தியாளர்கள் வினைத்திறனற்ற உற்பத்திக்கு பழக்கப்படுகிறார்கள். இந்த விடயத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்களை அரசாங்கம் மேலும் பாதுகாக்க வேண்டுமா? அப்படியானால், வர்த்தக பரிமாற்றங்களை நாங்கள் கவனமாக பரிசீலிக்கிறோமா; நுகர்வோருக்கு ஏற்படும் செலவுகள் என்ன?

பாதுகாப்புவாதம் என்பது நாட்டில் சூடுபிடிக்கும் தலைப்பொன்றாகும். இலங்கை பொருளாதாரம் 1977 இல் திறக்கப்பட்டதிலிருந்து, உள்ளூர் தொழில்களைப் பாதுகாப்பதற்காக பல்வேறு பிரச்சாரங்கள் செயல்படுத்தப்பட்டன. பொருளாதாரத்தைத் திறந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தெற்காசிய பிராந்தியத்தில் அவ்வாறு செய்த முதல் நாடாகிய நாங்கள் இன்னும் பின்தங்கியுள்ளோம்.

மாறாக, மற்ற நாடுகளுடனான தொழில்நுட்ப முதலீடுகளில் தொடர்புபடலாம், அவை நாட்டில் குறைந்த விளைதிறன், குறைந்த செயல்திறன் கொண்ட, பாதுகாக்கப்பட்ட கைத்தொழில்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை பரிமாறிக்கொள்ள உதவும். இது வெளிநாட்டு முதலீட்டிற்காக பொருளாதாரத்தைத் திறத்தல், முதலீட்டாளர் நட்பு சூழலை உருவாக்குதல், அரசாங்கத்தால் பெரிதும் வரி விதிக்கப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட கொள்கைகளில் பெரும்பாலானவற்றை தளர்த்துதல்  ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும்.

பாதுகாப்புவாதத்தின் இந்த நிருவாகமுறை தோல்வியுற்றதால், எங்கள் உற்பத்தியாளர்களை வெளிநாட்டுப் போட்டியில் இருந்து பாதுகாக்குமாறு நாங்கள் இன்னும் அரசாங்கத்திடம் கேட்கப்போகிறோமா?