Food Security

தன்னிறைவுக்காக உணவுப் பாதுகாப்பை தியாகம் செய்தல்

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.
Sacrificing food security for self-sufficiency

- தனநாத் பெர்னான்டோ

70 களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட பெரும் தோல்விக்குப் பின்னர் “தன்னிறைவு” என்ற மூடநம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் ஒரு சமூகத்தின் வீழ்ச்சியில் கிட்டத்தட்ட முழு மக்கள்தொகையையும் விட்டுச்சென்றதுடன் ஆளும் உயரர்மட்டத்தினரின் வயிற்றை நிரப்பியது. "தன்னிறைவு" என்ற சொல்லின் வரைவிலக்கணத்திற்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. இலங்கை பூஜ்ஜிய வர்த்தகத்துடன் மற்றும் சர்வதேச வரைபடத்தில் ஒருபோதும் காணப்படாத ஒரு சகாப்தத்திற்கு ஒரு கருத்தியல் இட்டுச் செல்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், ஒருவர் பயிரிட்டவைகளை மாத்திரம் உட்கொண்டு வாழ்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. பின்னர் மாற்று வாதங்கள் எழுந்தன- உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒருவருக்கு தன்னிறைவு தேவை; உணவில் தன்னிறைவு பெற வேண்டும், ஆனால் எரிபொருள், நிலக்கரி, மருந்து, மூலப்பொருட்கள் மற்றும் பிற "அத்தியாவசியப் பொருட்களை" இறக்குமதி செய்யலாம் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர் . எங்கள் வர்த்தக பற்றாக்குறை எங்கள் வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டதுடன் நமது ஏற்றுமதி திறனை அதிகரிப்பதற்கு நாம் தன்னிறைவு பெற வேண்டும் என்று நம்புகிற மற்றவர்களும் இருக்கிறார்கள்,. எல்லா வாதங்களிலும், உணவுப் பாதுகாப்பு என்பது மிகவும் பிரபலமானது. எனவே, உணவுப் பாதுகாப்பு குறித்த தரவுகள் மற்றும் வரையறைகளை ஆராய்ந்து இலங்கை உண்மையிலேயே “தன்னிறைவு” பெற முடியுமா என்பதை மதிப்பீடு செய்வோம்.

உணவுப் பாதுகாப்பு என்றால் என்ன?

"உணவுப் பாதுகாப்பு" என்ற பிரபலமான நம்பிக்கையானது, ஒரு நெருக்கடியின் போது நமது நுகர்வுக்கு போதுமான உணவைக் கொண்டிருக்க வேண்டுமென்பதாகும். தற்போதைய உலகளாவிய COVID-19 நெருக்கடியானது ஒரு முக்கிய உதாரணமாகும். ஆறு மாதங்கள் நீடிக்க போதுமான உணவு இருப்பினை வைத்திருத்தல் மற்றும் நாட்டின் பிராந்திய எல்லைகளுக்குள் தேவையான கலோரி அளவை உற்பத்தி செய்யும் திறனே உணவுப் பாதுகாப்பு குறித்த மற்றொரு பொதுவான கட்டுக்கதையாகும். ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் உலக உணவு உச்சி மாநாடு ஆகியன உணவுப் பாதுகாப்பை பின்வருமாறு வரையறுத்துள்ளன: “அனைத்து மக்களும், எல்லா நேரங்களிலும், போதுமான, பாதுகாப்பான மற்றும் சத்தானதும் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான அவர்களின் உணவுத் தேவைகளையும் உணவு விருப்பங்களையும் பூர்த்தி செய்கின்றதுமான உணவுக்கான பௌதீக மற்றும் பொருளாதார அணுகலைக் கொண்டிருக்கும்போது உணவுப் பாதுகாப்பு உள்ளது ”

பிரபலமான நம்பிக்கை இருந்தபோதிலும், உணவுப் பாதுகாப்பை அடைவதற்கு, அக்கறை கொண்ட நாடு அதன் எல்லைக்குள் தேவையான உணவை உற்பத்தி செய்யத் தேவையில்லை. முக்கியமானது தேவையான உணவை அளவிலும், விரும்பிய தரத்திலும் சிக்கனமாக  உற்பத்தி செய்வதாகும். இல்லையெனில், எங்கள் விலைமதிப்பற்ற மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களை வீணாக்குவோம். இதற்கு இலங்கையின் 65,610 சதுர கிலோமீற்றர்களுடன் ஒப்பிடும்போது வெறும் 725.7 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட சிங்கப்பூரை  உதாரணமாக எடுத்துக் கொள்ளவும். வணிக வேளாண்மை இல்லாத போதிலும், இரண்டாவது வருடமாகவும் உலகளாவிய உணவு பாதுகாப்பு குறிகாட்டியில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. ஏனென்றால், சிங்கப்பூர் உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலியுடன் முழுமையாக ஒருங்கிணைந்து, வெளிப்புற அதிர்ச்சிகளின் போது தனது குடிமக்களுக்கு உணவளிக்க போதுமான இருப்பினை உருவாக்கியுள்ளது. இது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாகும், ஏனெனில் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் (FAO) வரையறுக்கப்பட்ட, பாதுகாப்பான, போதுமான மற்றும் நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் உணவை உட்கொள்ள முடியும். ஒப்பீட்டளவில் அதே குறிகாட்டியில் இலங்கை 66 வது இடத்தில் உள்ளது. சக இலங்கையர்களுக்கு எல்லா நேரங்களிலும் பௌதீக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உணவு கிடைப்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) வரைவிலக்கணத்தின்படி, கொவிட்- 19  நெருக்கடியின் போது தெளிவாகத் தெரிவது என்னவென்றால், நம்மிடம் பௌதீக ரீதியாக உணவு இருந்தாலும், ஒரு நாடு என்ற வகையில் நமது உணவுப் பாதுகாப்பு, விநியோகப் பிரச்சினைகள் காரணமாக இந்த உணவுக்கு ரீதியான அணுகல் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது, அவர்களின் அன்றாட ஊதியங்கள் தடைப்படுவதாலும் உணவு விருப்பத்தெரிவுகள் இல்லாததாலும் மக்கள் உணவுக்கான பொருளாதார மற்றும் பௌதீக ரீதியான அணுகல்கள் இரண்டையும் இழக்கின்றனர். பண்டாரநாயக்க அரசாங்கம்  பின்பற்றிய தோல்வியுற்ற சோசலிச சோதனை மேற்கூறியவற்றில் எதையும் அடையத் தவறிவிட்டது. குறைந்தபட்சம் உணவு போதுமானதாக இல்லை; தெரிவு ஒரு கனவாக இருந்ததுடன் தரம் ஒருபோதும் இருக்கவில்லை. ஒரு குடிமகன் அதை விட மேலதிகமாக எதையாவது வைத்திருந்து  கைது செய்யப்பட்டால், அது ஒரு கொடூரமான குற்றமாகக் கருதப்பட்டு அவர் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். மாவு பூச்சிகளாலும் மற்றும் அரிசி கற்களாலும் பழுதடைந்தது, மற்றும் மண்ணெண்ணெய் வாசனை மற்றும் விறகு அடுப்புக்கு அருகில் கவனக்குறைவாக இருப்பவர்களால் தீப்பற்றும் அபாயத்துடன் துணிமணிகள் இருந்தன. குறைந்த தரத்திலான பாணிற்காக உலகில் மிக நீண்ட வரிசைகளில் நாம் காத்திருந்தோம்.  அதுவும் உங்கள் குடும்பத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே ஒரு இறாத்தல் பாணிற்காக மட்டுமே நாம் காத்திருந்தோம். சுருக்கமாக, நகர்ப்புற சமூகத்திற்கு (பெரும்பான்மையானவர்கள் உணவு வாங்க பணம் வைத்திருந்த இடத்தில்), பௌதீகரீதியான அணுகல் மற்றும் விருப்பத்தேர்வுகள் இல்லாததால் உணவுப் பாதுகாப்பு சவாலுக்குட்பட்டது, அதே நேரத்தில் கிராமப்புற மற்றும் பெருந்தோட்ட சமூகங்களின் உணவுப் பாதுகாப்பு வருமானம் மற்றும் விருப்பத்தேர்வுகள் இல்லாததால் சவாலுக்குட்பட்டதுடன் அவர்கள் தங்கள் தோட்டங்களில் கிடைக்கக்கூடிய அல்லது காடுகளில் வளர்ந்த அனைத்தையும் உட்கொண்டனர். ஆகவே, உணவுப் பாதுகாப்பு என்பது தன்னிறைவு பெற முயற்சிப்பதன் மூலம் நாம் அடையக்கூடிய ஒன்றல்ல என்பது வெளிப்படையானது, ஏனெனில் அணுகல், மலிவு, பாதுகாப்பு, விருப்பத்தேர்வுகள் மற்றும் போசணைப் பெறுமதி போன்ற பல கூறுகள் உள்ளன. உணவு மற்றும் விவசாய அமைப்பின் படி (FAO) ஒரு நபரின் சராசரி தினசரி சக்தித் தேவையானது 1,680 கிலோகலோரியாகவிருப்பதுடன் இலங்கையில்  இந்த வரையறையை விட சராசரியாக 500 கிலோகலோரி அதிகமாக உள்ளது, ஆனால் சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவர தரவுகளின்படி, இலங்கை முழுவதும் ஏழ்மைத் துறையில் இந்த சக்தி உள்ளெடுத்தலானது உலக தரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. ஆகவே, நீண்ட காலத்தில் உணவுப் பாதுகாப்பு குறித்து நாம் தீவிரமாக இருந்தால், தன்னிறைவுக்கான வீழ்ச்சியில் வாழ்வதை விட, பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை நம் மக்கள் வாங்க முடியும் என்பதையும், அணுகலைப் பராமரித்து, தெரிவையும் உறுதிப்படுத்த வேண்டும். இதை அடைவதற்கு, உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலிகளுக்கு பாதுகாப்பான அணுகலை நாம் உருவாக்க வேண்டும், இதன் மூலம் நமது மக்கள் அவர்களது சக்தித் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான பல்வேறு வகையான உணவுகளை (சமநிலையான உணவு)வாங்க முடியும். ஒருவரிடம் காணப்படக் கூடிய அடுத்த கேள்வி என்னவென்றால், இது நம்முடைய எல்லா உணவுகளையும் இறக்குமதி செய்யப் போகிறோமா என்பதும், நமக்குத் தேவையான அனைத்தையும் இறக்குமதி செய்ய போதுமான அந்நிய செலாவணி உள்ளதா என்பதும் ஆகும். 

குறைந்த விவசாய உற்பத்தித்திறன்

மேற்கூறிய இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்கு, நமது விவசாயத்தில் (துறை) உற்பத்தித்திறன் ஏன் குறைவாக உள்ளது என்பதை நாம் சரிபார்க்க வேண்டும். எங்கள் நெல் வயல்களை தொழில்நுட்பம் எட்டாமையானது பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட பொதுவான சாக்காகும். ஆனால் தொழில்நுட்பம் நெல் வயல்களை எட்டாததற்கான காரணத்தைப் பற்றி நாம் சிந்தித்துள்ளோமா? இலங்கையில் 6.5 மில்லியன் ஹெக்டெயர் நிலத்தில், 5.4 மில்லியன் ஹெக்டெயர் நிலம் அரசுக்குச் சொந்தமானதாகும். சதவீத அடிப்படையில், தனியார் நிலங்கள் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் வெறும் 18% மட்டுமேயாகும். விவசாயிகள் அதிக அறுவடை தரக்கூடிய நெல் பயிரிட வேண்டுமானால் அசாங்க அலுவலகத்திலிருந்து அனுமதி பெற வேண்டும். விவசாயிகளுக்கு அவர்கள் பயிரிடும் நிலத்திற்கு உரித்து வழங்கப்படாததால், பெரும்பாலான நெல் நிலங்களுக்கு வங்கி கடனுக்கான அணுகல் மிகவும் குறைவாகவே உள்ளது. சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதால் நெல் வயலில் எந்தவொரு கட்டுமானமும் செய்ய முடியாது. தற்போதைய ஒழுங்குபடுத்தல் விதிமுறையின்கீழ், எந்த முதலீட்டாளரும் பச்சைவீட்டுப் பண்ணை அல்லது உயர் தொழில்நுட்ப பண்ணையில் முதலீடு செய்ய மாட்டார்கள். மேற்கூறியவற்றிற்கு மேலதிகமாக, பெரும்பாலான நெல் நிலங்கள் துண்டாடப்பட்டுள்ளன, எனவே உற்பத்தி செலவுகள் அதிகமாக இருக்கும் ஒரு பெரியளவிலான விவசாய செயல்பாட்டினை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் பொருள் என்னவென்றால், நாங்கள் மீண்டும் தன்னிறைவுக்குச் சென்று எங்கள் கொல்லைப்புறங்களில் பயிரிட்டாலும், நம்முடைய முழு நிலத்தின் ஐந்தில் ஒரு பகுதியை மட்டுமே பயிரிடவும், வீடுகளை கட்டவும், மற்ற அனைத்து தொழில்துறை வேலைகளையும் செய்ய வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், எமது ஊழியர் படையில் சுமார் 25% விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோம், ஆனால் நமது பெரும்பாலான நிலங்களை பயனற்றதாக விட்டுவிட்டு, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7-8% மட்டுமே பங்களிப்பு செய்கிறோம். 

உணவு இறக்குமதி மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை

நாம் எவ்வளவு வளமானவர்களாக இருந்தாலும் தீவிர தன்னிறைவு என்பது ஒரு விருப்பமல்ல, ஏனெனில் நமக்கு தேவையான அனைத்தையும் நம்மால் உற்பத்தி செய்ய முடியாது என்பது தெளிவானதாகும்- உதாரணம் - எரிபொருள் மற்றும் இயந்திரங்கள். எங்கள் வர்த்தக பற்றாக்குறையை குறுகியதாக வைத்து அதை மிகையாக மாற்றுவதற்கான ஒரே வழி நமது ஏற்றுமதியை மேம்படுத்துவதாகும். ஏற்றுமதியும் இறக்குமதியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். எங்களால் உற்பத்தி செய்ய முடியாத தயாரிப்புகள் அல்லது போட்டி நன்மை இல்லாத தயாரிப்புகளை நாங்கள் இறக்குமதி செய்கிறோம். எங்களுக்கு போட்டி நன்மை உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்கிறோம்.  ஏன் உலகளாவிய ஒத்துழைப்பால் மட்டுமே உணவுப் பாதுகாப்பை அடைய முடியும் என்பதை சுருக்கமாகக் கூறும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO)  ஒரு பிரித்தெடுப்பு பின்வருமாறு: “உலகளாவிய உணவு வர்த்தகம் தொடர்ந்து செல்ல வேண்டும். மக்கள் சாப்பிடும் ஒவ்வொரு ஐந்து கலோரிகளில் ஒன்று குறைந்தது ஒரு சர்வதேச எல்லையையாவது  தாண்டியுள்ளது, இது 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 50% க்கும் அதிகமாகும். ” எனவே, நமது ஏற்றுமதியை வளர்ப்பதற்கான நமது இயலாமை மற்றும் பாரம்பரியமாக மந்தமான அணுகுமுறை நமது மக்களின் உண்மையான மற்றும் அர்த்தமுள்ள உணவு பாதுகாப்பிற்கான வர்த்தக சமரசமாக இருக்கக்கூடாது.





உணவுப் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு

இந்த கட்டுரை ஒரு ஆங்கில கட்டுரையின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.

Food security and self-sufficiency

- பேராசிரியர் ரொஹான் சமரஜீவ

உணவு வழங்கல் சங்கிலிகள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் செயலிழக்கப்பட்டு அல்லது உடைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளில் உணவுப் பாதுகாப்பு குறித்து சிந்திப்பது சாதாரணமானதும் அவசியமானதுமாகும். ஆனால் புத்திசாலித்தனமாகவும், ஆதாரங்களால் அறிந்துகொண்ட வழிகளிலும் சிந்திக்க வேண்டியது அவசியமாகும்.

எல்லா தரவரிசைகளும் குறிகாட்டிகளும் அவற்றின் அடிப்படையை உருவாக்கும் தரவுகளில் அல்லது அவற்றின் வடிவமைப்பில் குறைபாடுகளைக் கொண்டுள்ளன. ஆனால் அவை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடலுக்கானதொரு பயனுள்ள தொடக்க புள்ளியை வழங்குகின்றன. உலகளாவிய உணவுப் பாதுகாப்புக் குறிகாட்டியானது  மலிவு, கிடைக்கும் தன்மை மற்றும் தரமும் பாதுகாப்பும் ஆகிய  மூன்று கூறுகளை உள்ளடக்கியதாகும். இயற்கை வளங்கள் மற்றும் மீண்டுவருதல் குறித்த புதிய கூறு 2019 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது.

உண்மையில், 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட மாநகர அரசாகிய சிங்கப்பூரில், விவசாய நிலங்களுக்கு அணுகல் இல்லை, எனவே உள்நாட்டில் வளர்க்கப்படும் உற்பத்திகள் அடிப்படைக் குறிகாட்டியில் முதலிடத்தில் உள்ளமையானது,  இந்த குறிகாட்டியானது பொது அறிவுக்கு அப்பாற்பட்ட உணவுப் பாதுகாப்புக்கான அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இயற்கை வளங்கள் மற்றும் விரிதிறன் ஆகியவற்றைக் கணக்கிடும்போது சிங்கப்பூர் 11 இடங்களுக்குக் கீழே வருகின்றது. இது கடல் மட்ட உயர்வு, கடல் ஊட்டவளம் மிகுத்தல் மற்றும் உணவு இறக்குமதியில் தங்கியிருத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடியதாகும். ஆனால் 11 ஆவது இடத்தில் கூட, இது தெற்காசிய நாடுகளை விட சிறப்பாக செயல்படுகிறது.

 நான் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பற்றி ஆய்வுசெய்து வருகிறேன். அனர்த்தக் கட்டுப்பாடு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கான தொலைத்தொடர்பு வளங்களை வழங்குவதற்கான டெம்பியர் சமவாயத்திற்கு இலங்கை அணுகுதல் மற்றும் வை 2 கே பிரச்சினைக்குத் தயார்படுத்தல் ஆகியன உடனடி காரணங்களாகும். நாங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விவசாய விநியோகச் சங்கிலிகளை ஆய்வுசெய்து வருகிறோம்.

 மீண்டுவரும் தன்மை – செலவு என்பவற்றிற்கிடையிலான சமரசம்

மீண்டுவரும் தன்மை – செலவு என்பவற்றிற்கிடையில் எப்போதுமே ஒரு சமரசம் இருக்கும். செலவு பற்றிய எந்தவொரு அக்கறையும் இல்லாவிட்டால், 100% தேவையற்ற வசதிகளுடன் மேலும் ஆதரிக்கப்படும் அதிவிசேட மீண்டும்வரும் தன்மையை ஒருவர் கொண்டிருக்கலாம். சிலநேரங்களில் அக்கறைகள் மிகவும் அதிகமாகவும் சூழல் இடர்மிக்கதாகவும்  இருக்கும்போது ஒருவர் பல உதவிபெறுவார். உதாரணமாக, யுத்தத்தின் மிக மோசமான நாட்களில்,  எல்.ரீ.ரீ.ஈ கொழும்பைத் தாக்கியபோது இலங்கை மின்சார சபை ஊழியர்கள் பொறியியலாளர்கள் எதிர்பாராதவிதமாகத் திடீரென வேலைநிறுத்தம் செய்த போத, நடமாடும் அடிப்படையிலான நிலையங்களுக்கு பெற்றரி உதவி பெறுமாறு  என்னிடம் கூறப்பட்டது, அவை டீசல் மின்பிறப்பாக்கிகளால் மேலும் ஆதரிக்கப்பட்டன. ஆனால், இவையனைத்திற்கும்  பணம் செலவாகிறது.

உணவுப் பாதுகாப்பிலும் இதுவே உள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கை நம்புவது இடரினைக் குறைக்கிறது என்று ஒருவர் நம்பலாம். ஆனால் உருளைக்கிழங்கின் உள்ளூர் உற்பத்தி செலவுகள் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கை விட கணிசமாக அதிகமானது என்பது அனைவரும் அறிந்ததே. உள்நாட்டு உற்பத்தியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கிற்கு விசேட வியாபாரப்பண்ட அறவீடுகளை விதிப்பதன் மூலம் பாதுகாக்கப்படுகின்றார்கள். இதன் பொருள் என்னவென்றால், உள்நாட்டு நுகர்வோர் திறமையாக உற்பத்தி செய்யப்படும் உள்ளூர் உருளைக்கிழங்கிற்கு அதிக பணம் செலுத்துவதுடன் அவர்கள் உட்கொள்ளும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கிற்கு அரசாங்கத்திற்கு மறைமுக வரி செலுத்துகிறார்கள்.

தற்காப்புப் பொருளாதாரக் கொள்கைகள் அனைவருக்கும் உணவு விலையை அதிகப்படுத்துகின்றன. அதன் பெறுபேறாக,  உழைப்புச் செலவு அதிகமாக உள்ளது. எனவே, உலகளவில் போட்டியிட வேண்டிய பல கைத்தொழில்கள் அதிக உழைப்பு செலவுகளால் பாதிக்கப்படுகின்றன.

திறமையற்ற உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் ஆதாரங்கள் ஆபத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை. விவசாயம் இயல்பாகவே இடர்மிக்கதாகும். வெள்ளம், வறட்சி, பூச்சிகள் மற்றும் நோய் பயிர்களை அழிக்கும். உண்மையிலேயே மீண்டுவரும் விநியோகச் சங்கிலிகள் ஒரு தனிப்பட்ட பிரதேசத்தை (உருளைக்கிழங்கிற்காக வெலிமடை போன்று) அல்லது ஒரு தனிப்பட்ட நாட்டைக் கூட நம்பியிருக்காது. உதாரணமாக வியட்நாம் என எடுத்துக் கொண்டால்  நாட்டிற்குத் தேவையான அரிசித் தேவைக்கு முற்றிலும் சார்ந்திருக்காமல்,  அரிசியில் தன்னிறைவு பெறுவதை ஒரு முழுமையான கொள்கை நோக்கமாக நினைப்பது நல்ல யோசனையாக இருக்காது.

கொவிட்-19 மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு முகங்கொடுத்து, வியட்நாம் அரிசி ஏற்றுமதியில் சில வரம்புகளை விதித்துள்ளது, இது அதன் வாடிக்கையாளர்களிடையே அக்கறைக்கு நியாயமான காரணத்தைத் தரும். ஆனால் மறுபுறம், உள்ளூர் உற்பத்தியை முழுமையாக நம்புவதும் ஆபத்தானது என்பது 2016-17இல் ஏற்பட்ட வறட்சியானது, 2015-16 ஆம் ஆண்டில் 2,903 மெட்ரிக் டொன்னாகவிருந்த அரிசி உற்பத்தியை 1,474 மெட்ரிக் டொன்னாகக் குறைத்தபோது விளங்கியது.  

 எனவே, உணவுப் பாதுகாப்பிற்கான உண்மையான பதில் தன்னிறைவுக்கான எளிமையான முயற்சி அல்ல, மாறாக பல்வேறு மூலங்களின் மூலம் செலவு மற்றும் இடர் நிர்வாகத்தை சமநிலைப்படுத்துதல் மற்றும் விநியோகச் சங்கிலிகள் வலுவானவை என்பதை உறுதிப்படுத்துதல் என்பனவாகும். இறுகும் புள்ளிகளைக் கட்டுப்படுத்தும் தனியுரிமையின்  தோற்றத்தைத் தடுப்பது பிரதிபலிப்பின் முக்கிய அங்கமாகும். இந்த சிக்கலான சமரசங்கள் மற்றும் சமப்படுத்தல்களைத்  தான் உலகளாவிய உணவு பாதுகாப்பு குறிகாட்டியானது, 34 வெவ்வேறு குறிகாட்டிகளின் நிறையிட்ட கலவையினூடாகச்  சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றது.

இலங்கையின் உணவுப் பாதுகாப்பு - மதிப்பீடுசெய்யப்பட்டது

2019 ஆம் ஆண்டில் 113 நாடுகளில் இலங்கை 66 வது இடத்தைப் பிடித்தது. இது ஊட்டச்சத்துத் தராதரங்கள்,  சராசரி உணவு செலவில் மாற்றம், உலக வறுமைக் கோட்டின் கீழுள்ள மக்கள் தொகை விகிதம், உணவு பாதுகாப்பு, உணவு இழப்பு, நகர்ப்புற உறிஞ்சுதல் திறன், விவசாய உற்பத்தியின் ஏற்ற இறக்கம், மற்றும் விவசாயிகளுக்கு நிதியளிப்பதற்கான அணுகல்  போன்றவற்றில் அதிக மதிப்பெண் பெற்றது. விவசாய ஆய்வு மற்றும் அபிவிருத்தி மீதான பொதுச் செலவு, கொள்வனவு இயல்திறனை அடிப்படையாகக் கொண்ட தலா மொத்தத் தேசிய உற்பத்தி, புரதத் தரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை (2018 மற்றும் 2019 க்கு இடையில் மிகப்பெரிய சரிவு) ஆகியவற்றின் அடிப்படையில் அதன் மதிப்பெண் குறைக்கப்பட்டது.

இலங்கையின் ஒட்டுமொத்த மதிப்பெண் சராசரியை விட சற்று குறைவாக இருந்ததுடன் தரம் மற்றும் பாதுகாப்பில் சற்று குறைவாக இருந்தது. இது தெற்காசியாவில் அதன் சகாக்களை விட முன்னால் இருந்தது, ஆனால், இந்தோனேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பிலிப்பைன்ஸ் போன்ற சக நாடுகளுக்குப் பின்னால் இருந்தது. இந்தியா 72 வது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் (78 வது இடம்) மற்றும் நேபாளம் (79 வது) என அதனைவிடக் குறைவாக உள்ளன. வழக்கம் போல், இலங்கை மிகவும் மோசமாக இல்லை, ஆனால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். 

இயற்கை வளங்கள் மற்றும் மீண்டுவருதல் ஆகியன கலவையில் சேர்க்கப்படும்போது, ​​இலங்கை 113 இல் 67 வது இடத்தினுள் வருகின்றது. சில நாடுகளில் மீண்டுவருதல் தொடர்பான காரணிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. எடுத்துக்காட்டாக, அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் பரந்த ஊசலாட்டத்தைக் காட்டுகின்றன. அடிப்படைக் குறிகாட்டியில் 12 வது இடத்தில் உள்ள அவுஸ்திரேலியா, இயற்கை வளங்கள் மற்றும் மீண்டுவருதல் காரணிகளாக இருக்கும்போது 16 வது இடத்திற்கு வீழ்ச்சியடைகிறது, அதே நேரத்தில் நியூசிலாந்து அவுஸ்திரேலியாவைவிட  ஐந்து ஸ்தானங்கள் முந்திக்கொண்டு 14வது இடத்திற்கு முன்னேற்றியுள்ளது.

செலவுக்கு உணர்திறன் கொண்ட மீண்டுவரும் தன்மை

கொவிட்-19 இற்கான பிரதிபலிப்பும், அதன் விளைவாக உணவு வழங்கல் சங்கிலிகளால் ஏற்பட்ட சேதமும் முழு விவசாய முறையையும் முழுமையான மீளாய்வுக்கு அழைப்பு விடுக்கின்றது. தற்போதைய அமைப்பின் பலவீனம் வெறுமனே விடப்பட்டுள்ளது. ஆனால் பிரதிபலிப்பானது நுணுக்கமாக இருப்பதுடன் ஆதாரங்களை நிதானமாக கருத்தில் கொண்டும், உணவில் பணத்திற்கான  மதிப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டும்  வழங்கப்பட வேண்டும். திறனற்ற உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதற்காக இறக்குமதியைத் தடைசெய்வதற்கும் நுகர்வோர் மீது வரி விதிப்பதற்கும் பதிலாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பன்முகப்படுத்தப்பட்டிருப்பதால் விநியோகச் சங்கிலிகள் நெகிழக்கூடியவை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். விநியோகச் சங்கிலிகளில் இணைப்புகளின் தனியுரிமையைத் தடுப்பதே இதைச் செய்வதற்கான சிறந்த வழியாகும்.

தன்னிறைவு போன்ற சுலோகங்களுக்கு எளிமையான பின்வாங்கல் போதுமானதாக இருக்காது. 1970 களில் இருந்தே அந்தக் கொள்கைகளில் இலங்கைக்கு அனுபவம் உள்ளது. பின்னர் அவை  வசதிபடைத்தவர்களுக்கு கறுப்புச் சந்தையும் ஏழைகளுக்கு  ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும் வழிவகுத்தன. மிகவும் எளிமையான நேரத்தில் செயல்படுத்தப்பட்ட அவற்றை பலசரக்குக் கடைகளால் நுகர்வோர் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முடியாத சிக்கலான இன்றைய பொருளாதார நிலையில்  செயற்படுத்த முடியாதுள்ளது.